பக்கம் எண் :

போர் பாடியது161


இதுவும் அது

405.வெருவர வரிசிலை தெரித்தநாண்
      விசைபடு திசைமுகம் வெடிக்கவே
செருவிடை அவரவர் தெழித்ததோர்
     தெழிஉல குகள்செவி டெடுக்கவே.

     (பொ-நி.)   தெரித்த   நா(ணால்)   திசைமுகம் வெடிக்க, தெழி(யால்) உலகுகள் செவிடெடுக்க; (எ-று.)

     (வி-ம்.)  வெருவருதல்-அச்சம் விளைதல். வரி சிலை-கட்டமைந்த வில்.
நாண்-நாணோசை(யால்)நாண்விசை: ஆறன் தொகை. முகம்-இடம். செரு-போர்.
அவர்-வீரர். தெழித்தல்-அதட்டுதல்; தெழி-ஒலியால். செவிடெடுக்க-செவிடுபட.
(2)

இருபடைகளும் கைகலந்தமை

406.எறிகட லொடுகடல் கிடைத்தபோல்
      இருபடை களுமெதிர் கிடைக்கவே
மறிதிரை யொடுதிரை மலைத்தபோல்
     வருபரி யொடுபரி மலைக்கவே.

     (பொ-நி.)   இருபடைகளும்,   கடலொடு,   கடல்    கிடைத்தபோல்,
எதிர்கிடைக்க, பரியொடு பரி, திரையொடு திரைமலைத்த போல், மலைக்க;
(எ-று.)

     (வி-ம்.)  எறிதல் - அலைவீசுதல்.  கிடைத்தல் - அகப்படுத்தப்படுதல். கிடைக்க-எதிர்க்க. மறிதல் - சுருண்டு வீழ்தல். திரை-அலை. மலைத்தல்-போர் செய்தல், பரி -குதிரை.                                        (3)

யானைப்படையும் தேர்ப்படையும் மலைந்தமை

407.கனவரை யொடுவரை முனைத்தபோல்
      கடகரி யொடுகரி முனைக்கவே
இனமுகில் முகிலொடு மெதிர்த்தபோல்
     இரதமொ டிரதமும் எதிர்க்கவே.

     (பொ-நி.)   கரியொடு   கரி.   வரையொடு    வரைமுனைத்தபோல் முனைக்க, இரதமோ  டிரதமும்,  முகில் முகிலொடு மெதிர்த்தபோல் எதிர்க்க; (எ-று.)