(பொ-நி.) குருதியின் நதி பரக்க, குடை இனம் நுரைஎன மிதக்க, கரி உடல் இருபுடை கரை என, கிடக்க; (எ-று.) (வி-ம்.) குருதி-செந்நீர். வெளி-வெற்றிடமெல்லாம். பரக்க-பரவிப்பாய. குடை-வெண்கொற்றக்குடை. கரி-யானை. துணித்தல்-வெட்டுதல். புடை-பக்கம். வெட்டப்பட்ட யானையுடல்கள் குருதியாற்றின் இருபுறமும் கரையைப் போன்றுகிடந்தன வென்க. (7) யானைப் போர் 411. | மருப்பொடு மருப்பெதிர் பொருப்பிவை | | எனப்பொரு மதக்கரி மருப்பி னிடையே நெருப்பொடு நெருப்பெதிர் சுடர்ப்பொறி தெறித்தெழ நிழற்கொடி தழற்க துவவே. |
(பொ-நி.) பொருப்பு இவை என பொரு, கரி மருப்பினிடையே, நெருப்பொடு எதிர் நெருப்பு, சுடர்ப்பொறி, தெறித்து எழ, கொடி, தழல் கதுவ; (எ-று.) (வி-ம்.) மருப்பு-யானைத்தந்தம். பொருப்பு-மலை. கரி-யானை. கொடி- கொடிச்சீலைகள். தழல்-தீ. கதுவ-பற்றிக்கொள்ள, குருதி தோய்ந்த யானைத் தந்தத்துக்கு நெருப்பை உவமையாக்குக. யானைப்போரில் தோன்றிய நெருப்பால் கொடிச்சீலைகள் தீப்பற்றின என்க. (8) இதுவும் அது 412. | நிழற்கொடி தழற்கது வலின்கடி | | தொளித்தவை நினைப்பவர் நினைப்ப தன்முனே அழற்படு புகைக்கொடி எடுத்தன புதுக்கொடி அனைத்தினு நிரைத்த தெனவே. | (பொ-நி.) கொடி, தழல் கதுவலின் ஒளித்தவை, நினைப்பதன்முனே, புதுக்கொடி நிரைத்ததென புகைக்கொடி எடுத்தன; (எ-று.) (வி-ம்.) நிழல்கொடி-நிழலைத் தரும் கொடி. தழல்-நெருப்பு கதுவல்- பற்றுதல். ஒளித்தவை-இருந்த இடம் தெரியாமல் மறைந்தவை. அழல்-தீ. புகைக்கொடி - புகையாகியகொடிகள். அனைத்தினும் - எவ்விடத்தும் துகிற்கொடிகள் மறைந்து புகைக்கொடிகள் தோன்றின என்க. (9) |