பக்கம் எண் :

164கலிங்கத்துப்பரணி

இதுவும் அது

413.இடத்திடை வலத்திடை இருத்திய
      துணைக்கரம் நிகர்த்தன அடுத்த கரியின்
கடத்தெழு மதத்திடை மடுத்தன
     சிறப்பொடு கறுத்தன அவற்றின் எயிறே.

     (பொ-நி.) கரியின் மதத்திடை மடுத்தன. கறுத்தன, எயிறு, துணைக்கரம்
நிகர்த்தன; (எ-று.)

     (வி-ம்.) துணைக்கரம் - இரு  கைகள். அடுத்த -எதிர்த்த. கரி-யானை.
கடம் - மதச்சுவடு.  மடுத்தல் - உட்புகவிடல். கறுத்தன-மதநீர்  பட்டமையின்  கருநிறம் அடைந்தன.  எயிறு - தந்தம்.  இரு  தந்தங்களும்  மேலும்  இரு கைகளைப்போல தோற்றமளித்தன என்க.
                                                          (10)

இதுவும் அது

414.எயிறுக ளுடையபொ ருப்பைவ லித்திடை
      எதிரெதிர் இருபணை இட்டுமு றுக்கிய
கயிறுகள் இவையென அக்கர டக்கரி
     கரமொடு கரமெதிர் தெற்றிவ லிக்கவே.

     (பொ-நி.) பொருப்பை  வலித்து,  பணை  இட்டு,  முறுக்கிய கயிறுகள்
இவையென, கரி, கரமொடு கரம் எதிர் தெற்றிவலிக்க; (எ-று.)

     (வி-ம்.) எயிறு - தந்தம். பொருப்பு - யானை. வலித்து - ஒன்று கூட்டி.
பணை - மூங்கில்.  கரடம்   - மதச்சுவடு.  கரி - யானை. கரம் - துதிக்கை. தெற்றுதல்-முறுக்கிக்கொள்ளுதல். வலித்தல் -இழுத்தல். யானைகளைக்கொண்டு இரு மூங்கில் துண்டுகளால் கயிறு முறுக்குவிப்பதுபோல் இருந்ததென்க.   
                                                         (11)

குதிரைப்படைப் போர்

415.முடுகிய பவனப தத்திலு கக்கடை
      முடிவினில் உலகமு ணச்சுடர் விட்டெழு
கடுகிய வடஅன லத்தினை வைத்தது
     களமுறு துரகக ணத்தின்மு கத்திலே.