பக்கம் எண் :

166கலிங்கத்துப்பரணி

     மருப்பு-(இற்ற) தந்தங்கள்.சயமகள்-வெற்றித் திருமகள். களபம்-கலவைச்
சாந்து மார்பில் முறிந்து தங்கிய தந்தம் முலைக்குறி ஒத்ததென்க.     (14)

குதிரைவீரர் யானைப்படையை அழித்தமை

418.சயமகள் களபமு லைக்கணி யத்தகு
      தனிவடம் இவையென மத்தக முத்தினை
அயம்எதிர் கடவிம தக்கரி வெட்டினர்
     அலைபடை திரைகள்க ளத்துநி ரைக்கவே.

     (பொ-நி.)   படைநிரைகள்   நிரைக்க   அயம்   கடவி   முலைக்கு
அணியத்தகும் வடம் இவை என, மதக்கரி முத்து மத்தகத்தினை வெட்டினர்;
(எ-று.)

     (வி-ம்.) வடம்-(முத்து)  மாலை. முத்து  மத்தகத்தினை  என இயைக்க.
அயம்-குதிரை.  கடவி-செலுத்தி.   கரி-யானை.  அலை-கடல்.  நிரை-வரிசை.
நிரைக்க-பரந்துகிடக்க.  மதக்கரி  மத்தகத்தினை வெட்டியபோதுதிர்ந்த முத்து
வரிசைகள் முத்து மாலையை ஒத்தவென்க.                      (15)

போர்க்களம் தீயில் மூழ்கியது

419.அலைபடை நிரைகணி ரைத்தசெ ருக்களம்
      அழல்புரி களமென ஒப்பில விற்படை
தலைபொர எரியநெ ருப்பினின் மற்றது
     தழல்படு கழைவனம் ஒக்கினு மொக்குமே.

     (பொ-நி.) செருக்களம்  அழல்புரி  களம்  என, விற்படை தலைபொர,
(அவை) நெருப்பினின் எரிய, அது தழல்படு கழைவனம் ஒக்கும்; (எ-று.)

     (வி-ம்.) அலை-கடல். அழல்-தீ. புரிதல்-உண்டுபண்ணுதல். களம்-இடம்.
தலை - வீரர்கள்  தலை. அத்தலைகள் எரிய என்க. அது -அப்போர்க்களம்.
தழல் - நெருப்பு.  கழை - மூங்கில்.   அம்பு  தலையைப்  பொர  எழுந்த  நெருப்பால் தலைகள் எரிய, தீப்பற்றிய மூங்கிற்காட்டை ஒத்ததென்க.     (16)