வாட்படையும் உலக்கைப்படையும்கொண்டு பொருதமை 427. | கலக்க மற்ற வீரர் வாள்க | | லந்த சூரர் கைத்தலத் துலக்கை உச்சி தைத்த போது ழுங்க லப்பை ஒக்குமே. |
(பொ-நி.) வீரர் வாள், உலக்கை உச்சி தைத்தபோது ,உழுங்கலப்பை ஒக்கும்; (எ-று.) (வி-ம்.) கலக்கம் - அச்சம். கலந்த - (மாறுபட்டுக்கைகலந்த) சூரர்- படைவீரர். தலம்-இடம். உழும்-கலப்பை-உழுகின்ற கலப்பைகள். (24) துணிந்து வீழ்ந்த யானைத் துதிக்கைநிலை 428. | மத்த யானை யின்க ரம்சு | | ருண்டு வீழ வன்சரம் தைத்த போழ்தின் அக்க ரங்கள் சக்க ரங்க ளொக்குமே. |
(பொ-நி.) யானையின் கரம் சுருண்டு வீழ, சரம் தைத்த போழ்தின், அக்கரங்கள் சக்கரங்கள் ஒக்கும்; (எ-று.) (வி-ம்.) மத்தம் - மதகுணம். கரம் - துதிக்கை. சரம்-அம்பு. சுருண்டு- சுருண்டுகொண்டு. (25) யானை மத்தகம் பிளந்தமை 429. | வெங்க ளிற்றின் மத்த கத்தின் | | வீழு முத்து வீரமா மங்கை யர்க்கு மங்க லப்பொ ரிச்சொ ரிந்த தொக்குமே. |
(பொ-நி.) மத்தகத்தின் வீழும் முத்து, பொரி சொரிந்த தொக்கும்; (எ-று.) (வி-ம்.) மத்தகத்தின்-மத்தகத்தினின்றும், வீர மா மங்கையர்-வெற்றி மடந்தையர். வீரமங்கையரை வீரர் போர்க்களத்தில் மணம் புரிந்தனர் என்க. மங்கலம் - மணவினை பொரி -நெற்பொரி (மணக்காலத்துச் சொரியப்படுவது). வீரர்யானை மத்தகத்தைப்பிளந்ததால் முத்துக்கள் சிந்தின என்க. (26) |