பக்கம் எண் :

172கலிங்கத்துப்பரணி

     (வி-ம்.) கவந்தம்-குறைஉடல். தம் முன்பு என இயைக்க. தம்-பேய்தம்.
நிவப்பு-உயர்வு. ஆட்டுவிக்கும்-ஆடப் பழக்குகின்ற.  நித்தகாரர்-நிருத்தகாரர்:
ஆட்டுவிப்போர்.                                            (29)

யானை குதிரை ஒட்டகம் திரியுநிலை

433.ஒட்ட கங்கள் யானை வாலு
      யர்த்த மாஅ ழிந்தபோர்
விட்ட கன்று போகி லாது
     மீள்வ போலும் மீளுமே.

     (பொ-நி.)   ஒட்டகங்கள்,  யானை,  மா,  போர்விட்டு,   போகிலாது,
மீள்வபோலும் மீளும்; (எ-று.)

     (வி-ம்.) வால் உயர்த்த  மா - குதிரை.  அழிந்த போர்-பலரும்  பட்ட
போர்க்களம்.  அகன்று  போகிலாது - நீங்கிச்  சொல்லாமல். மீள்வபோலும்-
மீண்டும் பொரும்போலும்.   தம்மீது   ஏறிச்  செலுத்தியோர்  பட்டமையின்,  அவை நெறியின்றித்திரிந்தன வென்க.                           (30)

குருதி வெள்ளத்தில் பட்டு வீழ்ந்த யானையின் இயல்பு

434.பிறங்கு சோரி வாரி யிற்பி
      ளிற்றி வீழ்க ளிற்றினம்
கறங்கு வேலை நீரு ணக்க
     விழ்ந்த மேகம் ஒக்குமே.

     (பொ-நி.) சோரி வாரியில் வீழ் களிற்றினம், வேலை நீர்  உண, கவிந்த
மேகம் ஒக்கும்; (எ-று.)

     (வி-ம்.) பிறங்குதல் - நிறம்  விளங்குதல். சோரி - குருதி.  வாரி-கடல்.
பிளிற்றுதல்-வீறிடுதல்.  களிறு-யானை.  கறங்குதல்-ஒலித்தல்.   வேலை-கடல்;
கவிழ்ந்த-படிந்த.`                                           (31)

யானையின் துதிக்கை துணித்தோர் இயல்பு

435.வாளில் வெட்டி வார ணக்கை
      தோளில் இட்ட மைந்தர்தாம்
தோளில் இட்டு நீர்வி டுந்து
     ருத்தி யாளர் ஒப்பரே.