பக்கம் எண் :

போர் பாடியது173


     (பொ-நி.) வாரணக்கை வெட்டி, தோளில் இட்டமைந்தர் துருத்தியாளர்
ஒப்பர்; (எ-று.)

     (வி-ம்.) வாளில்-வாளால்.  வாரணம்-யானை.  கை-துதிக்கை. தோளில்
இட்ட-தம்  தோள்களில்  கொண்ட.  மைந்தர்-வீரர்.  துருத்தி-நீர் நிறைத்து
ஒழுக்கும் பெருங்குழாய்.                                     (32)

அம்பு தொளைத்த வில்லோர் இயல்பு

436.நேர்முனையில் தொடுத்த பகழிகள்
      நேர்வளையில் சுழற்று மளவினில்
மார்பிடையில் குளித்த பகழியை
     வார்சிலையில் தொடுத்து விடுவரே.

     (பொ-நி.) பகழிகள் நேர்; வில்  சுழற்றும்  அளவினின், மார்பிடையில்
குளித்த பகழியை, சிலையில் தொடுத்து விடுவர்; (எ-று.)

     (வி-ம்.) நேர் - தனக்கு  நேர்;  எதிர்தலுமாம். முனை - போர்முனை
தொடுத்த  -  பகைவீரன்   தொடுத்த.   பகழி - அம்பு.   பகழிகள் நேர் -
பகழிகளுக்கு நேர் வளைவில்  - வளைந்த  வில்.  தம்மிடம்  தொடுத்துவிட  அம்பின்மையின், பகை அம்பைத்தடுக்கத்  தம் வில்லைச் சுழற்றினர்  என்க. குளித்த - தைத்த. பகழி-அம்பு. வார்-நீட்சி.
                                                        (33)

குதிரையை வீழ்த்திய வீரர் இயல்பு

437.அசையஉரத் தழுத்தி இவுளியை
      அடுசவளத் தெடுத்த பொழுதவை
விசையமகத் தெடுத்த கொடியென
     விருதர்களத் தெடுத்து வருவரே.

     (பொ-நி.)  விருதர்,    சவளத்து,    இவுளியை   உரத்து   அழுத்தி,
எடுத்தபொழுது, அவை கொடி என, எடுத்து வருவர்; (எ-று.)

     (வி-ம்.) அசைய-வருந்த.  உரம்-மார்பு. அழுத்தி-குத்தி. இவுளி-குதிரை.
அடுதல்-கொல்லுதல். சவளம்-ஈட்டி. எடுத்தல்-தூக்கிப்பிடித்தல். விசைய மகள்-
வெற்றிமகள் கொடி என - கொடி என்று கூறும்படி. என - என்று கண்டோர்
சொல்ல. விருதர்-வீரர். களம்-போர்க்களம்.                     (34)