தொடை வெட்டுண்ட வீரர் செயல் 438. | இருதொடையற் றிருக்கு மறவர்கள் | | எதிர்பொருகைக் களிற்றின் வலிகெட ஒருதொடையைச் சுழற்றி எறிவர்கள் ஒருதொடைஇட் டுவைப்பர் எறியவே. |
(பொ-நி.) மறவர்கள், களிற்றின் வலிகெட ஒரு தொடையைச் சுழற்றி எறிவர்கள்; ஒரு தொடை எறிய இட்டு வைப்பர்; (எ-று.) (வி-ம்.) இருதொடை - தம் இரண்டு தொடைகளும.் மறவர்கள்- போர்வீரர்கள். கை - துதிக்கை. தொடை - வெட்டுண்டு பக்கத்தே கிடக்கும் தொடை. இட்டு வைப்பர்-போட்டிருப்பர். எறிய-மீண்டும் எறியவேண்டி. (35) வாட்போர் 439. | இருவருரத் தின்உற்ற சுரிகையின் | | எதிரெதிர்புக் கிழைக்கு மளவினில் ஒருவரெனக் கிடைத்த பொழுதினில் உபயபலத் தெடுத்த தரவமே. |
(பொ-நி.) இழைக்கும் அளவினில், இருவர் உரத்தின் உற்ற சுரிகையின், ஒருவர் என, கிடைத்தபொழுதினில், அரவம் எடுத்த; (எ-று.) (வி-ம்.) உரம் -மார்பு. சுரிகை - உடைவாள். இழைத்தல்-போர்செய்தல். கிடைத்தல்-இயைதல். ஒருவர் வாள்மற்றொருவர் மார்பிலே புக, இருவரும் ஒருவரேபோல் தோன்றினர் என்க. உபயம்-இரண்டு. பலம்-சேனை. எடுத்தது- தோன்றியது; அரவம்-ஒலி. (36) வீரர் யானைவீரரோடு பொருதமை 440. | பொருநர்கள் சிலர்தமு ரத்தி னிற்கவிழ் | | புகர்முகம் மிசையடி யிட்ட திற்பகை விருதரை அரிவர்சி ரத்தை அச்சிரம் விழுபொழு தறையெனும் அக்க ளிற்றையே. |
|