பக்கம் எண் :

போர் பாடியது175


     (பொ-நி.) சிலர்,  புகர்முகம்  மிசை அடி இட்டு, அதில்பகை விருதரை
சிரத்தை அரிவர்; அச் சிரம் விழுபொழுது அறை எனும் ; (எ-று.)

     (வி-ம்.) பொருநர்-வீரர்.  உரம்-மார்பு.  கவிழ்-கொல்லுதற்குக் கவிழ்ந்த.
புகர்முகம் - யானை. அதில் - அவ்வானையின் மேல் இருந்த. விருதர் -வீரர்.
சிரம்   - தலை.  விழுபொழுது  - கீழே  விழுங்கால்.  அறை - (என்னை வெட்டியோனைக்) கொல்.                                    (37)

படை அற்றோர் குதிரையொடு பொருதமை

441.விடுபடை பெறுகிலர் மற்றி னிச்சிலர்
      விரைபரி விழஎறி தற்கு முற்பட
அடுகரி நுதல்பட விட்ட கைப்படை
     அதனையொர் நொடிவரை யிற்ப றிப்பரே.

     (பொ-நி.)  சிலர்,  படைபெறுகிலர்;  பரி எறிதற்கு கரிநுதல் படவிட்ட
படை அதனை பறிப்பர்;(எ-று.)

     (வி-ம்.) படை - படைக்கருவி. விரைபரி: வினைத்தொகை.  பரி-குதிரை.
விழ-சாவ. எறிதற்கு-விடுதற்கு. முற்பட-முன்னமேயே. அடுகரி: வினைத்தொகை.
கரி-யானை. நுதல்-நெற்றி.  பட-அழுந்த. கை-தங்  கை. படை - வாள், வேல்
முதலியன. நொடி-கைநொடிப்பொழுது. வரை-அளவு. பறித்தல்-பிடுங்கல்.
                                                        (38)

வீரன் யானைப்படையானோடு பொருத்து

442.அமர்புரி தமதக லத்தி டைக்கவிழ்
      அடுகரி நுதலில டிப்பர் இக்களி
றெமதென இருகண்வி ழிக்க உட்கினர்
     எனவிடு கிலர்படை ஞர்க்கு வெட்கியே.

     (பொ-நி.)  அகலத்திடைக்   கவிழ்   கரிநுதலில்  அடிப்பர்;  வெட்கி,
கண்விழிக்க உட்கினர் என விடுகிலர்; (எ-று.)

     (வி-ம்.) அமர் - போர். அமர்புரி  கரி  என இயைக்க. அகலம்-மார்பு. கவிழ்- தாக்குதற்குக் கவிழ்ந்த. கரி-யானை. நுதல்-முகம். உட்கினர்-அஞ்சினர். "என உட்கினர்"  யானை  வீரர்.  படைஞர்க்கு - படைவீரர்கட்கு. வெட்கி -
வெட்கங்கொண்டு.  விடுகிலர் - படைவிடுகிலர். அஞ்சிக்  கண்மூடியமையின்
அவர்மீது படை விடுகிலர் வீரர் என்க.
                                                         (39)