கருணாகரன் போரில் முனைதல் 443. | அலகில் செருமுதிர் பொழுது வண்டையர் | | அரசன் அரசர்கள் நாதன் மந்திரி உலகு புகழ்கரு ணாக ரன்றன தொருகை இருபணை வேழம் உந்தவே. |
(பொ-நி.) செருமுதிர் பொழுது, வண்டையர் அரசன், மந்திரி, கருணாகரன் வேழம் உந்த; (எ-று.) (வி-ம்.) அலகு - அளவு. செரு - போர். முதிர்பொழுது-முற்றியபோது. அரசர்கள் நாதன்: குலோத்துங்கன். கை - துதிக்கை. பணை - தந்தம். உந்த- செலுத்த; ஓட்ட (40) வெற்றிகாண இருபடையும் ஒருமுகப்பட்டமை 444. | உபய பலமும்வி டாது வெஞ்சமம் | | உடலு பொழுதினில் வாகை முன்கொள அபயன் விடுபடை ஏழ்க லிங்கமும் அடைய ஒருமுக மாகி முந்தவே. |
(பொ-நி.) உபய பலமும் உடலு பொழுதினில், அபயன் விடுபடை(யும்) ஏழ் கலிங்கமும், ஒருமுகமாகி, வாகைகொள, முந்த; (எ-று.) (வி-ம்.) உபயம் - இரண்டு. பலம் - சேனை. சமம் - போர். உடலுதல்- சினந்தெழுதல். வாகை - வெற்றி. அபயன்-குலோத்துங்கன். அடைய-முழுதும் ஒருமுகம் ஆகி-ஒன்றுபட்டு. இதுவரை பரந்துபட்டுப் போர்செய்த படைகள் இரண்டும் தாம் ஒருமுகப்பட்டன என்க. முந்த-முற்பட்டுப் பொர. (41) இருபடையும் கிளர்ந்தெழுந்தமை 445. | அணிகள் ஒருமுக மாக உந்தின | | அமரர் அமரது காண முந்தினர் துணிகள் படமத மாமு றிந்தன துரக நிரையொடு தேர்மு றிந்தவே. |
(பொ-நி.) அணிகள் உந்தின; அமரர் அமரது காணமுந்தினர்; மதமா முறிந்தன; துரகநிரையொடு தேர் முறிந்த; (எ-று.) |