பக்கம் எண் :

போர் பாடியது177


     (வி-ம்.)  அணி - இருதிறத்துப்படை  வகுப்புக்களும்.   ஒருமுகமாக -
பரந்துபட்டு  இராமல். உந்துதல் -செலுத்தல்.  அமரர் -தேவர். அமர்-போர்.
துணி-துண்டம். மதமா - யானை. முறிந்தன - வெட்டுண்டன. துரகம்-குதிரை.
நிரை- வரிசை.                                            (42)

போரின் கடுமை

446.விருதர் இருதுணி பார்நி றைந்தன
      விடர்கள் தலைமலை யாய்நெ ளிந்தன
குருதி குரைகடல் போல்ப ரந்தன
     குடர்கள் குருதியின் மேல்மி தந்தவே

     (பொ-நி.)  துணி  பார்  நிறைந்தன  ;  தலை மலையாய் நெளிந்தன ;
குருதி கடல்போல் பரந்தன ; குடர்கள் மிதந்த ; (எ-று.)

     (வி-ம்.) விருதர் - வீரர். துணி - உடல் துணிந்த பகுதிகள். பார்-மண்.
விடர்-வீரர். நெளிதல் - உருண்டோடல். குருதி-செந்நீர். குரைத்தல்-ஒலித்தல். பரத்தல் - பரவுதல்.                                       (43)

இதுவும் அது

447.கரிகள் கருவிகளோடு சிந்தின
      கழுகு நரியொடு காகம் உண்டன
திரைகள் திசைமலை யோட டர்ந்தன
     திமில குமிலமெ லாம்வி ளைந்தவே.

     (பொ-நி.)  கரிகள்  சிந்தின;  காகம்  உண்டன; திரைகள் அடர்ந்தன;
திமில குமிலமெலாம் விளைந்த; (எ-று.)

     (வி-ம்.) கரி - யானை. கருவி - கூட்டம்.  திரை - குருதிநீரின் அலை.
திசைமலை -எட்டுத்திக்கு மலைகள். திமில குமிலம். ஒரு பொருட் பன்மொழி; பேரொலி. விளைந்த-உண்டாயின.                             (44)

கலிங்க வேந்தன் பொருதலாற்றாது ஒதுங்கியமை

448.புரசை மதமலை ஆயி ரங்கொடு
      பொருவ மெனவரும் ஏழ்க லிங்கர்தம்
அரசன் உரைசெய்த ஆண்மை யுங்கெட
     அமரில் எதிர்விழி யாதொ துங்கியே.