(பொ-நி.) மதமலை ஆயிரம் கொடு வரும் அரசன், ஆண்மையும் கெட எதிர் விழியாது ஒதுங்கி; (எ-று.) (வி-ம்.) புரசை- யானைக்கழுத்திடு கயிறு. மதமலை-யானை. பொருவம்- போர்செய்வோம். அரசன்: அனந்தபதுமன். உரைசெய்த-தான் உரைசெய்த. அமரில்-போர்க்களத்தில். எதிர் விழியாது-முகத்தைப் பார்க்காமல். (45) கலிங்க வேந்தன் களத்தைவிட்டு மறைந்து சென்றது 449. | அறியும் முழைகளி லோபதுங்கிய | | தரிய பிலனிடை யோம றைந்தது செறியும் அடவியி லோக ரந்தது தெரிய அரியதெ னாஅ டங்கவே. |
(பொ-நி.) பதுங்கியது முழைகளிலோ; மறைந்தது பிலனிடையோ, கரந்தது அடவியிலோ; தெரிய அரிது எனா அடங்க; (எ-று.) (வி-ம்.) முழை - மலைக்குகை. பிலன்-கீழறை.அடவி-காடு. கரந்தது - மறைந்தது. அடங்க - பதுங்கியிருக்க. (46) கலிங்கர் நடுக்கம் 450. | எதுகொல் இதுஇது மாயை ஒன்றுகொல் | | எரிகொல் மறலிகொல் ஊழியின்கடை அதுகொல் எனவல றாவி ழுந்தனர் அலதி குலதியோ டேழ்க லிங்கரே. |
(பொ-நி.) கலிங்கர் "மாயை ஒன்று கொல், எரிகொல், மறலிகொல், ஊழியின்கடை அதுகொல்" என அலறா விழுந்தனர்; (எ-று.) (வி-ம்.) இது - போர். மாயைஒன்று-ஒரு மாயவித்தை. எரி-தீ. மறலி- யமன்.ஊழி-யுகம்.அலதி குலதி-அலைதல் குலைதல். (47) கலிங்கர் சிதைந்தோடியது 451. | வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி | | மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம் இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர் இருவர் ஒருவழி போகல் இன்றியே. |
|