பக்கம் எண் :

போர் பாடியது179


     (பொ-நி.) ஒருவழி போகல் இன்றி, சிலர் வழிவர்; சிலர் கடல் பாய்வர்;
கரிமறைவர்; சிலர் பிலம் இழிவர்; சிலர் தூறு மண்டுவர்; (எ-று.)

     (வி-ம்.) வழிவர்-நழுவி ஓடுவர்.  கரி-யானையுள்.  பிலம் -மலைக்குகை.
இழிவர்-இறங்குவர். தூறு-புதர். மண்டுதல்-நெருங்குதல்.            (48)

இதுவும் அது

452.ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர்
      உடலின் நிழலினை ஓட அஞ்சினர்
அருவர் வருவரெ னாவி றைஞ்சினர்
     அபயம் அபயமெ னாந டுங்கியே

     (பொ-நி.) ஓடமுந்தினர்; நிழலினை அஞ்சினர்;  நடுங்கி  இறைஞ்சினர்;
(எ-று.)

     (வி-ம்.) முந்தினர் - முற்பட்டனர்.  ஓட,  நிழலினை  அஞ்சினர் என இயைக்க.  அச்சமிகுதியால்  தந்நிழலையும் கண்டு அஞ்சினர் என்க.அருவர்-
தமிழர். இறைஞ்சினர்-வணங்கினர்.                            (49)

இதுவும் அது

453.மழைகள் அதிர்வன போலு டன்றன
      வளவன் விடுபடை வேழம் என்றிருள்
முழைகள் நுழைவர்கள் போரில் இன்றுநம்
     முதுகு செயும்உப கார மென்பரே.

     (பொ-நி.) "வேழம்  உடன்றன" என்று முழைகள் நுழைவர்கள்; "முதுகு
செயும் உபகாரம்" என்பர்; (எ-று.)

     (வி-ம்.) மழை - மேகம்.   உடலுதல்  - சினந்தெழுதல்.   வளவன்-
குலோத்துங்கன்.வேழம்-யானை.முழை-மலைக்குகை.முதுகுகாட்டி ஓடினமையின்
உயிர் பிழைத்தாராதலால் தம் முதுகைப் பாராட்டினர் என்க.       (50)

இதுவும் அது

454.ஒருக லிங்கமொ ருவன ழித்தநாள்
 ஒருக லிங்கமொ ருவரு டுத்ததே.