(பொ-நி.) ஒருவன் கலிங்கம் அழித்தநாள், ஒருவர் உடுத்தது ஒரு கலிங்கம்; (எ-று.) (வி-ம்.) ஒருவன்-கருணாகரன். கலிங்கம்-கலிங்ககநாடு. கலிங்கம்-ஆடை. ஒருவர் உடுத்தது - ஒவ்வொரு வீரரும் அணிந்தது. மேலாடையும் இழந்து தோற்றோடினர் என்பதாம். (51) சோழர்படை யானை குதிரைகளைக் கைபற்றியது 455. | அப்படிக் கலிங்க ரோட | | அடர்த்தெறி சேனை வீரர் கைப்படு களிறும் மாவும் கணித்துரைப் பவர்கள் யாரே? |
(பொ-நி.) கலிங்கர் ஓட எறிவீரர், கைப்படு களிறும் மாவும் கணித்து உரைப்பவர்கள் யார்? (எ-று.) (வி-ம்.) ஓட - ஓடுமாறு. அடர்த்து எறி-நெருங்கிக் கொன்ற. கைப்படு- கையில் அகப்பட்ட. களிறு - ஆண்யானை. மா-குதிரை. கணித்தல்-அளவிடல். (52) கைப்பட்ட களிறுகளின் தன்மை 456. | புண்தரு குருதி பாயப் | | பொழிதரு கடமும் பாய வண்டொடும் பருந்தி னோடும் வளைப்புண்ட களிற நேகம். |
(பொ-நி.) குருதிபாய, கடமும் பாய, வண்டொடும் பருந்தினோடும் வளைப்புண்ட களிறு அநேகம்; (எ-று.) (வி-ம்.) குருதி-செந்நீர். கடம்-மதநீர். வளைப்புண்ட-சூழப்பட்டிருக்கின்ற. குருதியைக் கண்டு பருந்துகளும், மதநீரைக் கண்டு வண்டுகளும் தாம் தாம் உண்பதற்குச் சுற்றின. ஆதலால் இவ்வாறு கூறினார். (53) இதுவும் அது 457. | ஒட்டறப் பட்ட போரில் | | ஊர்பவர் தம்மை வீசிக் கட்டறுத் தவர்போல் நின்று கட்டுண்ட களிற நேகம். |
|