(பொ-நி.) போரில் ஊர்பவர் தம்மை வீசி, நின்று கட்டுண்ட களிறு அநேகம்; (எ-று.) (வி-ம்.) ஒட்டு அற - எஞ்சுதல் அற. ஊர்பவர் - தம்மை ஊர்ந்து செலுத்தியோர். கட்டு - பாசம். கட்டறுத்தவர் - துறவோர். கட்டுண்ட - சோழவீரர்களால் கட்டுண்ட. (54) இதுவும் அது 458. | வரைசில புலிக ளோடு | | வந்தகட் டுண்ட வேபோல் அரசருந் தாமும் கண்டுண்டு அகப்பட்ட களிற நேகம். |
(பொ-நி.)புலிகளோடு வரை கட்டுண்டவேபோல அரைசரும் தாமும் கட்டுண்டு அகப்பட்ட களிறு அநேகம்; (எ-று.) (வி-ம்.) வரை - மலை. அரைசர்: போலி அரசர். தாம்: யானைகள். மலைகள் யானைக்கும், அரசர்கள் புலிக்கும் ஒப்பாக உவமையுரைத்தார். (55) சோழவீரர் கவர்ந்த பொருள்கள் 459. | நடைவ யப்பரி யிரதம் ஒட்டகம் | | நவதி திக்குல மகளிரென்று அடைய வப்பொழுது அவர்கள் கைக்கொளும் அவைக ணிப்பதும் அருமையே. |
(பொ-நி.) பரி, இரதம், ஒட்டகம், நிதிக்குலம், மகளிர் என்று அவர்கள் கைக்கொளும் அவை கணிப்பதும் அருமை; (எ-று.) (வி-ம்.) வயம்-வலிமை. பரி-குதிரை. நிதி-செல்வம். அடைய -முழுதும். கணித்தல் - அளவிடல். அருமை - அரியதாகும். (56) கருணாகரன் கலிங்கவேந்தனைக் கொணருமாறு ஏவியது 460. | இவைக வர்ந்தபின் எழுக லிங்கர்தம் | | இறையை யுங்கொடு பெயர்துமென்று அவனி ருந்துழி அறிக வென்றனன் அபயன் மந்திரி முதல்வனே. |
|