(பொ-நி.) மந்திரி முதல்வன், இவை கவர்ந்தபின், கலிங்கர் தம் இறையையும் கொடுபெயர்து மென்று அவன் இருந்து அறிக என்றனன்; (எ-று.) (வி-ம்.) கலிங்கர் தம்இறை - அனந்தபதுமன். கொடு - கொண்டு. பெயர்தும் - செல்வோம். அவன்: அனந்தபதுமன். உழி-இடம். அபயன் - குலோத்துங்கன்.முதல்வன்: கருணாகரன். (57)ஒற்றர்கள் கலிங்கர்கோனைத் தேடியமை 461. | உரைகள் பிற்படு மளவில் ஒற்றர்கள் | | ஒலிக டற்படை கடிதுபோய் வரைக ளில்புடை தடவி அப்படி வனமி லைப்புரை தடவியே |
(பொ-நி.) ஒற்றர்கள், படை, போய், வரைகளில் புடைதடவி வனம் இலைப்புரை தடவி; (எ-று.) (வி-ம்.) உரை - கருணாகரன் கட்டளை. ஒற்றர்கள் - வேவுகாரர்; ஒற்றியிருந்தறிபவர் ஒற்றர்களும் கடல் போன்ற படைகளும். என்க. வரை- மலை. புடை - பக்கம். அப்படி - அங்ஙனமே. வனம் - காடு. இலைப்புரை தடவி - இலைப்பொந்தினும் ஆராய்ந்து தேடி. (58) ஒற்றர்கள் மொழிந்தமை 462. | சுவடு பெற்றிலம் அவனை மற்றொரு | | சுவடு பெற்றனம் ஒருமலைக் குவடு பற்றியது அவன டற்படை அதுகு ணிப்பரிது எனலுமே. |
(பொ-நி.) அவனை சுவடு பெற்றிலம்; மற்றொரு சுவடு பெற்றனம்; அவன் படை மலைக்குவடு பற்றியது; அதுகுணிப்பரிது எனலும் ; (எ-று.) (வி-ம்.) சுவடு - அடையாளம். குவடு - உச்சி. அவன்: கலி்ங்கவேந்தன் படை - சேனை. குணித்தல் - அளவிடுதல். எனலும் - என ஒற்றர் சிலர் சொல்லுதலும். (59) |