(பொ-நி.) "இம்மலை, ஒளி படைத்தது, யாதோ? உதயமென்னும் அம்மலையோ இம்மலையும்," என்ன, தெவ்வர் குருதி நதி பரக்க, அறுக்கும்போழ்து; (எ-று.) (வி-ம்.) செம்மலை - சிவந்த நிறமுள்ள மலை. யாதோ - யாது காரணமோ. என்றும்-எந்நாளும். என்ன-என்று கண்டார் சொல்ல. தெவ்வர் -பகைவர்.குருதி-செந்நீர். நதி-ஆறு.பரக்க-பரவிப்பாய. அறுத்தல்-அழித்தல். (62) கலிங்கர் மாற்றுருக்கொண்டு கரந்தமை 466. | வரைக்கலிங்கர் தமைச்சேர மாசை ஏற்றி | | வன்தூறு பறித்தமயிர்க் குறையும் வாங்கி அரைக்கலிங்கம் உரிப்புண்ட கலிங்கர் எல்லாம் அமணரெனப் பிழைத்தாரும் அநேகர் ஆங்கே. |
(பொ-நி.) மாசை ஏற்றி, மயிர்க்குறையும் வாங்கி கலிங்கம் உரிப்புண்ட கலிங்கர் எல்லாம், அமணர் என, பிழைத்தாரும் அநேகர்; (எ-று.) (வி-ம்.) வரை-மலை. சேர-அடையும்படி. மாசு-பழிச்சொல். தூறு -புதர். ஓடுங்கால் புதர்கள் பற்றக் கலிங்கர் மயிர்க் குறை எய்தினர் என்க. வாங்கி - களைந்து. அரை - இடை. கலிங்கம் - ஆடை. உரிப்புண்ட -களையப்பெற்ற. கலிங்கர் - கலிங்க வீரர். அமணர் - சமணர். என -என்றுபொய்புகன்று. (63) இதுவும் அது 467. | வேடத்தால் குறையாது முந்நூலாக | | வெஞ்சிலைநாண் மடித்திட்டு விதியாற் கங்கை ஆடப்போந் தகப்பட்டோம் கரந்தோம் என்றே அரிதனைவிட்டு உயிர்பிழைத்தார் அநேகர் ஆங்கே. |
(பொ-நி.) அநேகர், சிலைநாண் முந்நூலாக இட்டு "கங்கை ஆடப்போந்து கரந்தோம், அகப்பட்டோம்" என்று உயிர் பிழைத்தார்; (எ-று.) (வி-ம்.) முந்நூல்-முப்புரியுள்ள பூணூல். சிலை-வில் - நாண் - கயிறு. முடித்திட்டு - சுருட்டிக் கட்டி. விதி - முறைமை. கரந்தோம் - போர்ப் படையைக்கண்டு மறைந்தோம். அரி-போர்க்கருவி; மலையுமாம். (64) |