பக்கம் எண் :

போர் பாடியது185


    இதுவும் அது

468. குறியாகக் குருதிகொடி ஆடை யாகக்
      கொண்டுடுத்துப் போர்த்துத்தங் குஞ்சி முண்டித்து
அறியீரோ சாக்கியரை யுடைகண் டால்என்
     அப்புறமென் றியம்பிடுவர் அநேகர் ஆங்கே.

     (பொ-நி.) அநேகர்,  குறியாக,  குருதிகொடி  ஆடையாக  உடுத்து,
போர்த்து,    முண்டித்து,    ழுசாக்கியரை   அறியீரோ;   அப்புறம்  என்ழு
என்றியம்பிடுவர்; (எ-று.)

     (வி-ம்.)   குறி - (புத்த)   அடையாளம்.  குருதி - செந்நீர்.  கொடி
-கொடிச்சீலை. குஞ்சி-முடிமயிர்.  முண்டித்து - மொட்டையடித்து.  சாக்கியர்
-புத்தர். உடைகண்டால்-எம் ஆடையைப்பார்த்தால்.  இயம்பல் - சொல்லல்.
                                                          (65)

இதுவும் அது 

469.சேனைமடி களங்கண்டேம் திகைத்து நின்றேம்
      தெலுங்கரேம் என்றுசில கலிங்கர் தங்கள்
ஆனைமணி யினைத்தாளம் பிடித்துக் கும்பிட்டு
     அடிப்பாணர் எனப்பிழைத்தார் அநேகர் ஆங்கே.

     (பொ-நி.) அநேகர்  "தெலுங்கரேம், களம்  கண்டேம்,  நின்றேம்"
என்று  தாளம்  பிடித்து,  கும்பிட்டு  பாணரெனப்  பிழைத்தார்;  (எ-று.)

     
(வி-ம்.) சேனைமடி - படைகள் இறந்துபட்ட.  தெலுங்கரேம் - யாம்
தெலுங்கு நாட்டினோம். களம்-போர்க்களம். சில மணி என இயைக்க.தாளம்
பிடித்து - தாளமாகக்கொண்டு,  அடி  -  அடிபற்றி   வாழும்.  பாணரென
-பாணரெனக் கண்டார் கொள்ளுமாறு.                          (66)

சோழவீரர் கலிங்கர் அற அழித்தது

470.இவர்கள்மேல் இனியொருவர் பிழைத்தார் இல்லை
      எழுகலிங்கத்து ஓவியர்கள் எழுதி வைத்த
சுவர்கள்மேல் உடலன்றி உடல்க ளெங்கும்
     தொடர்ந்துபிடித் தறுத்தார்முன் அடைய ஆங்கே.