வள்ளைப்பாட்டுப்  பாடி,  அரிசியைத்  தீட்டின.  பின்  அரிசியைப்   புடைத்து அளந்து உலைதோறும் சொரிந்து, துடுப்பும் அகப்பையும் கொண்டு   அட்டன. 	  பின், கூழை உப்புப் பதம் பார்த்துக் கிண்டிப் பதம் பார்த்து  இறக்கி   வைத்தன; தண்ணீர் முகந்து வைத்துக் கொண்டன;  அலகிட்டு  நீர்தெளித்து   உண்பதற்கு   நிலம்   திருத்தின;  உண்கலம்  பரப்பின;  பகல்  விளக்கும்   பாவாடையும்   இட்டன;   உணவு   கொள்ள   எல்லாப்   பேய்களையும்     அழைத்தன; உணவு படைக்க அகப்பைகளைக் கொண்டன:  மடைப்பேய்கள்   கூழ் வார்க்கத்  தொடங்கின. 	  பல்வகைப்  பேய்கட்கும்  கூழ்  வார்க்கப்பட்டது. பேய்கள் எல்லாம்   உண்டன; வாய்  பூசின; வெற்றிலைபாக்  கயின்றன;  குதித்துக்  கூத்தாடின;   குலோத்துங்கனை  வாழ்த்தின,  இவ்வாறு  கூறி  முடிக்கின்றார்  ஆசிரியர். போர்க்களப் பெருமை | 472. | தேவாசுரம் ராமாயணம் மாபாரதம் உளவென்று |  |   | ஓவாஉரை  ஓயும்படி உளதப்பொரு களமே. |  
      (பொ-நி.) அப் பொருகளம், தேவாசுர, ராமாயண,  மாபாரதம்  உள   என்ற  உரை   ஓயும்படி  உளது;  (எ-று.)      (வி-ம்.) தேவாசுரம் - சூரபதுமன்  போர்.  ராமாயணம்  மாபாரதம்   அப்போர்களைக் குறித்து நின்றன. உள- சிறப்புற்றுப்பேச  உள்ளன.  ஓவா   -ஒழியாத.  உரை-சொல்.  உளது-சிறப்புற்றுளது.  பொருகளம் -கருணாகரன்   போர்க்களம்.                                                                (1) கலிங்கப்பேய் காளியைக் களம் காணுமாறு அழைத்தலும் 	காளி களம் குறுகலும்  | 473. | காலக்கள மதுகண்டருள் இறைவீகடி தெனவே |  |   | ஆலக்கள முடையான்மகிழ் அமுதக்களம் அணுகி. |  
      (பொ-நி.) களமது, கண்டருள் கடிதென; உடையான்  மகிழ்  அமுது,   களம் அணுகி; (எ-று.)             (வி-ம்.) காலன் - யமன்.   இறந்த   உடல்களே   நிறைந்தமையின்   காலக்களமாயிற்று.   இறைவீ - காளியே.  கடிது - விரைவில்.  ஆலக்களம்     உடையான்- நஞ்சுபூண்ட  மிடற்றையுடைய  சிவன்.  மகிழ்  அமுது:  காளி.   அமுதத்தை     யொத்தவள்:     ஆகுபெயர்.     இதுவரை   மொழிந்த     செய்திகளெல்லாம் கலிங்கப் பேயின் கூற்றேயாவதைத் தெளிக. 	                                                              (2)  |