பக்கம் எண் :

188கலிங்கத்துப்பரணி

காளி போர்க்களங்கண்டு வியந்துமொழிந்தது 

474.என்னேஒரு செருவெங்களம்
      எனவேயதி சயமுற்று
அந்நேரிழை அலகைக்கண
     மவைகண்டிட மொழியும்.

     (பொ-நி.) அந்  நேரிழை,  "களம் என்னே"  என  அதிசயமுற்று,
மொழியும்;  (எ-று.)

     (வி-ம்.) ஒரு- ஒப்பற்ற. செரு -போர். நேரிழை-காளி. அலகை-பேய்.
கணம்-கூட்டம்.
                                                           (3)

குருதி வெள்ளத்தில் யானை மிதந்து சென்றமை

475. உடலின்மேல் பலகாயஞ் சொரிந்து பின்கால்
      உடன்பதைப்ப உதிரத்தே ஒழுகும் யானை
கடலின்மேல் கலந்தொடரப் பின்னே செல்லுங்
     கலம்போன்று தோன்றுவன காண்மின் காண்மின்.

     (பொ-நி.)   சொரிந்து,   பதைப்ப,  உதிரத்தே  ஒழுகும்  யானை,
கடலின்மேல்  கலம்போன்று  தோன்றுவன  காண்மின்!  (எ-று.)

     (வி-ம்.)  காயம்-புண்ணால்.  சொரிந்து-குருதியைச்  சொரிந்து. பின்
-உடலின்  பிற்பகுதி.  உதிரம்-குருதி.  ஒழுகுதல்-மிதந்து  செல்லல்.  கலம்
-மரக்கலம்.   யானைகள்   குருதி  வெள்ளத்தில்  ஒன்றன்பின்  ஒன்றாகச்
செல்வது, கடலின்மேற் செல்லும் மரக்கலங்கள் போன்றிருந்த தென்க.
                                                           (4)

குதிரைகள் அடிபெயர்க்கலாற்றாது நின்றமை

476.நெடுங்குதிரை மிசைக் கலணை சரியப் பாய்ந்து
      நிணச்சேற்றிற் கால்குளிப்ப நிரையே நின்று
படுங்குருதிக் கடும்புனலை அடைக்கப் பாய்ந்த
     பலகுதிரைத் தறிபோன்ற பரிசு காண்மின்.