பக்கம் எண் :

களம் பாடியது191


கணவரைத் தேடிய மனைவியர் செயல்

481.தங்கணவ ருடன்தாமும் போக வென்றே
      சாதகரைக் கேட்பாரே தடவிப் பார்ப்பார்
எங்கணவர் கிடந்தவிடம் எங்கே யென்றென்று
     இடாகினியைக் கேட்பாரைக் காண்மின் காண்மின்.

     (பொ-நி.)  கனவருடன் தாமும் போக என்று,"கிடந்த இடம் எங்கே"
என்று என்று  சாதகரைக்  கேட்பார் ;  தடவிப்பார்ப்பார் ;  இடாகினியைக்
கேட்பாரைக் காண்மின் ! (எ-று.)

     (வி-ம்.)  சாதகர் - காளியின்   மெய்காப்பாளர்.   தடவிப்பார்ப்பார்
-தேடிக்காண்பர். இடாகினி - சுடலைப் பிணம்  தின்னும்  பேய்.
                                                          (10)

கணவனைக்கண்டு ஆவிசோர்ந்த மனைவி இயல்பு

482.வாய்மடித்துக் கிடந்ததலை மகனை நோக்கி
      மணியதரத்து ஏதேனும் வடுவுண் டாயோ
நீமடித்துக் கிடந்ததெனப் புலவி கூர்ந்து
     நின்றாவி சோர்வாளைக் காண்மின் காண்மின்.

      (பொ-நி.)  தலை  மகனை நோக்கி ," வடு உண்டாயோ? மடித்துக்
கிடந்தது(நன்று!)" எனப்  புலவி  கூர்ந்து,  ஆவிசோர்வாளைக்  காண்மின்!
(எ-று.)

     (வி-ம்.)  தலைமகன் - கணவன்.  மணி - அழகிய. அதரம் - உதடு.
மடித்து:மடிந்து   என்பதன்   வலித்தல்    விகாரம்  :  புலவி -  வெறுப்பு
(வெற்றிபெற்று மீளாது மடிந்து வீழ்ந்தமையின்). கூர்தல்-மிகுதல். ஆவி-உயிர்.
சோர்வாள்-குறைபவள்.
                                                           (11)

கணவனைத் தழுவி உயிர்விட்ட பெண்டிர் இயல்பு

483.தரைமகள்தன் கொழுநன்றன் உடலந் தன்னைத்
      தாங்காமல் தன்னுடலாற் றாங்கி விண்ணாட்
டரமகளிர் அவ்வுயிரைப் புணரா முன்னம்
     ஆவிஒக்க விடுவாளைக் காண்மின் காண்மின்.

     (பொ-நி.) கொழுநன்  உடலம்தன்னைத்  தரைமகள் தாங்காமல் தன
உடலால் தாங்கி,  அரமகளிர்  புணரா  முன்னம்  ஒக்கஆவி  விடுவாளைக்
காண்மின்;(எ-று.)