பக்கம் எண் :

கடை திறப்பு25


     (வி-ம்.)பூவிரி - அழகுமிக்க;  மலர்கள்  செறிந்த.   மதுகரம் நுகர-
தேனைக்  கையால்  நுகர;  வண்டு  உண்ண. கயல் - மீன் போன்ற கண்;
மீன் கரை - அகன்ற  கண்ணின்  இரு  கடை,  காவிரியின் கரை. காவிரி-
காவிரியாறு. கனகம்-பொன். பெண்களுக்கும் காவிரிக்குஞ் சிலேடை.   (39)

கூந்தலியல்பு கூறி விளித்தது

60.களப வண்டலிடு கலச கொங்கைகளின்
     மதிஎ ழுந்துகனல் சொரியுமென்று
அளக பந்திமிசை அளிகள் பந்தரிடும்
   அரிவை மீர்கடைகள் திறமினோ .

     (பொ-நி.)   கொங்கைகளின்  மதி  கனல் சொரியுமென்று;  அளிகள்
அளகபந்திமிசை பந்தரிடும் அரிவைமீர் திறமின்; (எ-று.)

     (வி-ம்.)களபம் - கலவைச் சாந்து. கலசம்-கும்பம். வண்டல் - சேறு.
மதி - நிலா. கனல் சொரியும் - (பிரிந்தார்க்குத்)துன்பம் செய்யும். அளகம்-
கூந்தல்.   பந்தி  -  கட்டு.   அளிகள்  -   வண்டுகள். பந்தர் - பந்தல்;
பந்தலிட்டாற்போல் கூட்டமாக வட்டமிட்டுப் பறந்துநிற்றல். அரிவை-பெண்,
பிரிந்தார்க்கு   மதிகனலைச்   சொரியுமென்று   வண்டுகள்  பந்தரிட்டன
என்றார்.                                                  (40)

புணர்ச்சிநிலை கூறி விளித்தது

61. வாயின் சிவப்பை விழிவாங்க
     மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்கத்
தோயக் கலவி அமுதளிப்பீர்
   துங்கக் கபாடம் திறமினோ.

     (பொ-நி.)  விழி  சிவப்பை வாங்க, வாய் வெளுப்பை வாங்க, கலவி
யமுது அளிப்பீர் திறமின்; (எ-று.)

     (வி-ம்.) வாங்க-தான் பற்றிக்கொள்ள. தோயம்-கடல். கலவி-புணர்ச்சி.
துங்கம் - மேன்மை.  விழி  சிவக்க,  உதடு வெளுக்கக்  கலவி புரிந்தமை
குறிக்கப்பட்டது.   கலவியின்   வாய்   வெளுத்தலும்,   கண்  சிவத்தலும் இயற்கையாதலான், இவ்வாறு ழுவாயின்......விழிவாங்க...வாய்வாங்கழு என நயம்
படக் கூறினார்.  தோய   -  தழுவ  எனக் கொண்டு பொருளுரைப்பினும்
பொருந்தும்.                                                (41)