பக்கம் எண் :

26கலிங்கத்துப்பரணி

இதுவும் அது

62.கூடும் இளம்பிறையில் குறுவெயர் முத்துருளக்
     கொங்கை வடம்புரளச் செங்கழு நீரளகக்
காடு குலைந்தலையக் கைவளை பூசலிடக்
   கலவி விடாமடவீர் கடைதிறமின் திறமின்.

     (பொ-நி.)வெயர்முத்து  உருள, வடம் புரள, அளகக்காடு அலைய, வளை பூசலிட: கலவிவிடா மடவீர், திறமின் திறமின். (எ-று.)

     
(வி-ம்.)பிறை - பிறைபோன்ற நெற்றி.  வெயர்-வெயர்வை. வடம்-
முத்துமாலை. அளகம்-கூந்தல். குலைந்து-அழிந்து.  அலைய-புரள.  பூசல்-
ஒலி, கலவி-புணர்ச்சி, புணர்ச்சி நிலை கூறியதாம்.                 (42)

கலிங்கப் போர்ப்பாடல் கேட்குமாறு விளித்தது

63.காஞ்சி இருக்கக் கலிங்கங் குலைந்த
     கலவி மடவீர் கழற்சென்னி
காஞ்சி இருக்கக் கலிங்கங் குலைந்த
   களப்போர் பாடத் திறமினோ.

     (பொ-நி.) காஞ்சி  இருக்கக்  கலிங்கம்  குலைந்த   மடவீர்  காஞ்சி
இருக்கக் கலிங்கம் குலைந்த போர் பாடத் திறமின்; (எ-று)

     (வி-ம்.)காஞ்சி - இடை அணி. கலிங்கம்-(உடுத்த) உடை.  குலைந்த-
நிலை  பெயர்ந்து  கிடந்த.  கலவி-புணர்ச்சி. கலவிக்காலத்து இடையணியும்
ஆடையும்  உலைவது  இயல்பாதலால்  இவ்வாறு நயந்தோன்றக் கூறினார்.
சென்னி-குலோத்துங்க சோழன்.  காஞ்சி-காஞ்சிபுரம். இருக்க-தங்கி இருக்க.
கலிங்கம் - கலிங்க  நாடு.  குலைந்த - அழிந்த.  போர் பாட-போரையான்
பாட.காஞ்சியும் கலிங்கமும் இரு பொருளில் வந்தன காண்க.         (43)

இதுவும் அது

64.இலங்கை எறிந்த கருணா கரன்தன்
    இகல்வெஞ் சிலையின் வலிகேட்பீர்
கலிங்கம் எறிந்த கருணா கரன்தன்
   களப்போர் பாடத் திறமினோ.