(பொ-நி.)இலங்கை எறிந்த கருணாகரன் தன் சிலையின் வலி கேட்பீர், கலிங்கம் எறிந்த கருணாகரன் தன் போர் பாடத்திறமின்; (எ-று.) (வி-ம்.)கருணாகரன்-கருணைக்கடலாகிய இராமன். இகல்-வலி. சிலை- வில். கேட்பீர் - கேட்க விரும்பும் பெண்களே. கருணாகரன்-கருணாகரத தொண்டைமான். அருளுக்கு இருப்பிடம் போன்றவன் என்பது பொருள் (குலோத்துங்கன் படைத் தலைவன்.) களப்போர் - கலிங்கக் களப்போர். கருணாகரன்: இப் பொருளில் வந்த நயம் உணரத் தக்கது. (44) காதல் இயல்பு கூறி விளித்தது 65. | பேணுங் கொழுநர் பிழைகளெலாம் | | பிரிந்த பொழுது நினைந்துஅவரைக் காணும் பொழுது மறந்திருப்பீர் கனப்பொற் கபாடந் திறமினோ. | (பொ-நி.) கொழுநர் பிழைகளெலாம் பிரிந்தபொழுது நினைந்து, காணும்பொழுது மறந்திருப்பீர் திறமின்; (எ-று.) (வி-ம்.)பேணும் - அன்புசெய்யும். கொழுநர் - கணவர். பிரிவுத் துன்பத்தால் பிழை நினைதலும் கண்ட உவகையில் அது மறத்தலும் இயல்பாம் என்க. கனம் - மேன்மை, உயர்வு. பொன் - அழகு; பொன்னாலியன்ற. இதனைக் 'காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால், காணேன் தவறல் லவை' எனத் திருவள்ளுவர் தந்த காதலி கூற்றும் ஒப்புநோக்கத் தக்கது. (45)கணவரோடு பயிலுமியல்பு கூறி விளித்தது 66. | வாச மார்முலைகள் மார்பி லாடமது | | மாலை தாழ்குழலின் வண்டெழுந்து ஊச லாடவிழி பூச லாடஉற வாடு வீர்கடைகள் திறமினோ. |
(பொ-நி.) முலைகள் மார்பில் ஆட, குழலின் வண்டு ஊசலாட, விழி பூசலாட, உறவாடுவீர் திறமின்; (எ-று.) |