(பொ-நி.)இலங்கை  எறிந்த   கருணாகரன்  தன்  சிலையின்  வலி     கேட்பீர்,  கலிங்கம் எறிந்த கருணாகரன் தன் போர் பாடத்திறமின்; (எ-று.)           (வி-ம்.)கருணாகரன்-கருணைக்கடலாகிய இராமன். இகல்-வலி. சிலை-   வில். கேட்பீர் - கேட்க  விரும்பும்  பெண்களே. கருணாகரன்-கருணாகரத   தொண்டைமான்.  அருளுக்கு  இருப்பிடம்  போன்றவன் என்பது பொருள்   (குலோத்துங்கன் படைத்  தலைவன்.)  களப்போர் - கலிங்கக்  களப்போர்.   கருணாகரன்: இப் பொருளில் வந்த நயம் உணரத் தக்கது.          (44) காதல் இயல்பு கூறி விளித்தது | 65. |   பேணுங் கொழுநர் பிழைகளெலாம் |  |   |     பிரிந்த பொழுது நினைந்துஅவரைக்   காணும் பொழுது மறந்திருப்பீர்         கனப்பொற் கபாடந் திறமினோ. |              (பொ-நி.)  கொழுநர்  பிழைகளெலாம்  பிரிந்தபொழுது  நினைந்து, காணும்பொழுது மறந்திருப்பீர் திறமின்; (எ-று.)           (வி-ம்.)பேணும்  -  அன்புசெய்யும். கொழுநர் - கணவர்.  பிரிவுத்   துன்பத்தால்  பிழை  நினைதலும்  கண்ட  உவகையில்  அது  மறத்தலும்   இயல்பாம்   என்க.  கனம்   -   மேன்மை,   உயர்வு.  பொன் - அழகு;   பொன்னாலியன்ற.  இதனைக் 'காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்,   காணேன்  தவறல்  லவை'  எனத்  திருவள்ளுவர்  தந்த  காதலி கூற்றும்   ஒப்புநோக்கத் தக்கது.                          (45)கணவரோடு பயிலுமியல்பு கூறி விளித்தது | 66. |   வாச மார்முலைகள் மார்பி லாடமது |  |   |     மாலை தாழ்குழலின் வண்டெழுந்து   ஊச லாடவிழி பூச லாடஉற         வாடு வீர்கடைகள் திறமினோ. |   
       (பொ-நி.)  முலைகள் மார்பில் ஆட, குழலின் வண்டு ஊசலாட, விழி பூசலாட, உறவாடுவீர் திறமின்; (எ-று.)  |