பக்கம் எண் :

கடை திறப்பு29


கொழுநர் வரவுபார்த்திருந்த நிலைகூறி விளித்தது

69. வருவார் கொழுநர் எனத்திறந்தும்
     வாரார் கொழுநர் எனவடைத்தும் 
திருகும் குடுமி விடியளவும்
   தேயும் கபாடம் திறமினோ.

     (பொ-நி.)திறந்தும் அடைத்தும் குடுமி விடியளவும் தேயும்கபாடம்
திறமின்; (எ-று.)

    (வி-ம்.) கொழுநர் - கணவர். திருகும் - சுழலும்.  குடுமி - வாயிலின்
மேற்புறத்தமைந்த    குழிவிடத்தோடு    பொருத்தப்   பெறும்   கதவின்
தலைப்பகுதி.  விடி அளவும் - இரவுப்பொழுது நீங்கும் வரையும்.  தேயும்-
தேய்ந்துபோகும்.  இதனை  'தாயர்  அடைப்ப  மகளிர் திறந்திடத், தேயத
்திரிந்த குடுமியவே'  என   வரும்   முத்தொள்ளாயிரச்செய்யுளோடு (117)
ஒப்பவைத்துக் கண்டு மகிழ்க.                                 (49)

கூடியும் ஊடியும் நின்றநிலை கூறி விளித்தது

70.ஊடு வீர்கொழுநர் தங்கள் பான்முனிவொ
     ழிந்து கூடுதலின் உங்களைத்
தேடுவீர் கடைகள் திறமி னோஇனிய
   தெரிவை மீர்கடைகள் திறமினோ.

    (பொ-நி.)ஊடுவீர்; முனிவு ஒழிந்து கூடுதலின், உங்களைத் தேடுவீர்,
திறமினோ; தெரிவை மீர்திறமினோ; (எ-று.)

    (வி-ம்.)கொழுநர் - கணவர். முனிவு - ஊடல்; கூடுதல் - புணர்தல்.
உங்களைத்தேடுவீர் - உங்களை மறந்திருப்பீர் என்றபடி. அஃதாவது காதல்
மயக்கத்தால்  தம்மைத்தாமே  மறந்து காதல் வயப்பட்டிருத்தல். இதனைத்,
ழுதன்னையும் துறக்கும்  தன்மை காமத்தே தங்கிற் றன்றேழு' என்னும் கம்பர
மொழியானும் அறிக. தெரிவை-பெண்.                           (50)

கண்ணியல்பு கூறி விளித்தது

71.பண்படு கிளவியை அமுதெனப்
    பரவிய கொழுநனை நெறிசெயக்
கண்கொடு கொலைசெய அருளுவீர்
   கனகநெ டுங்கடை திறமினோ.