தோற்றுவாய் 75. | களப்போர் விளைந்த கலிங்கத்துக் | | கலிங்கர் நிணக்கூழ் களப்பேயின் உளப்போர் இரண்டு நிறைவித்தாள் உறையும் காடு பாடுவாம். | (பொ-நி.) கலிங்கத்து, நிணக்கூழ் போர் இரண்டு நிறைவித்தாள் உறையும் காடு பாடுவோம்; (எ-று.)
(வி-ம்.) களம் - போர்க்களம். நிணம் - கொழுப்பு. உளப்போர் இரண்டு-உள் அ போர் இரண்டு. உள் வயிற்றினுள். போர்-பொந்து (போர்- போரை; பொந்து) நிறைவித்தாள்-நிறைவித்த காளி. உறையும்-இருக்கின்ற. (1) காட்டின் இயல்பு கூறியது 76. | பொரிந்த காரை கரிந்த சூரைபு | | கைந்த வீரையெ ரிந்த வேய் உரிந்த பாரையெ றிந்த பாலையு லர்ந்த வோமைக லந்தவே. |
(பொ-நி)காரை, சூரை, வீரை, வேய், பாரை, பாலை, ஓமை கலந்த; (எ-று.) (வி-ம்.)பொரிந்த-பொரிபொரியாய்ப் போன. உரிந்த- பட்டை உரிந்த. எறிந்த - முறிந்த. கலந்த - கலந்தன. காரை சூரை வீரை முதலிய மரங்கள் பொரிந்தும் கரிந்தும் புகைந்தும் எறிந்தும் போயினவெனின் அப்பாலையின் வெம்மையைப் பற்றிக் கேட்கவேண்டாவென்க. (2) இதுவும் அது 77. | உதிர்ந்த வெள்ளிலு ணங்கு நெல்லியொ | | டுங்கு துள்ளியு லர்ந்தவேல் பிதிர்ந்த முள்ளிசி தைந்த வள்ளிபி ளந்த கள்ளிப ரந்தவே. | (பொ-நி.) வெள்ளில், நெல்லி, துள்ளி, வேல், முள்ளி, வள்ளி, கள்ளி பரந்த; (எ-று.) |