மான்கள் இயல்பு கூறியது 83. | தீயின் வாயின்நீர் பெறினு முண்பதோர் | | சிந்தை கூரவாய் வெந்து வந்துசெந் நாயின் வாயின்நீர் தன்னை நீரெனா நவ்வி நாவினால் நக்கி விக்குமே. | (பொ-நி.) நவ்வி - சிந்தை கூர, வெந்து, வந்து நாயின் வாயின் நீர் தன்னை நக்கி விக்கும்; (எ-று)
(வி-ம்.)தீயின், வாய் - நெருப்பிடை. நீர்பெறினும்-நீர் கிடைப்பினும். ஆய் - ஆகி. வாயின் நீர் - வாயினின்று சொட்டும் நீர். நீர்எனா- தண்ணீரெனக் கருதி. நவ்வி - மான். செந்நாயின் வாய்நீர் நக்கத் தக்கதன்றாகலின் அதனை நக்கிய மானுக்கு விக்கலுண்டாயிற்று. (9) நிலத்தின் வெம்மை கூறியது 84. | இந்நி லத்துளோர் ஏக லாவதற்கு. | | எளிய தானமோ அரிய வானுளோர் அந்நி லத்தின்மேல் வெம்மை யைக்குறித்து அல்ல வோநிலத்து அடியி டாததே. | (பொ-நி.) வானுளோர் அடி இடாதது வெம்மையைக் குறித்தல்லவோ; நிலத்துளோர் ஏகல் ஆவதற்கு எளிய தானமோ? (எ-று.)
(வி-ம்.)ஏகல் ஆவது -ஏகுவது. தானம்-இடம். வானுளோர் -தேவர். நிலத்து அடியிடாதது - பூமிமீது தம் கால்களை வைக்காமல் இருப்பது. கடவுளர்களின் கானிலந்தோயாமைக்குக்காரணம் இப்பாலை நிலத்தின ்கொடுமையே என ஆசிரியர் ஒரு புதுமையான காரணத்தைக் கூறுகிறார்.(10) இதுவும் அது 85. | இருபொழுதும் இரவிபசும் புரவிவிசும்பு | | இயங்காதது இயம்பக் கேண்மின் ஒருபொழுதுந் தரித்தன்றி ஊடுபோ கரிது அணங்கின் காடென் றன்றோ. | (பொ-நி.) புரவி இயங்காதது கேண்மின்; அணங்கின் காடு ஊடுபோ கரிதென்றன்றோ? (எ-று.) |