(வி-ம்.)இரவி-ஞாயிறு. புரவி-குதிரை. விசும்பு-வானம். இயங்காதது- செல்லாததன் காரணம். தரித்தல்-தங்கி இளைப்பாறல். ஊடு-நடுவே. போக அரிது -செல்லுதல் இயலாது. அணங்கு; காளி. (11) இதுவும் அது 86. | காடிதனைக் கடத்தும்எனக் கருமுகிலும் | | வெண்மதியுங் கடக்க அப்பால் ஓடிஇளைத்து உடல்வியர்த்த வியர்வன்றோ உகுபுனலும் பனியும் ஐயோ. | (பொ-நி.) முகிலும் மதியும் கடக்க, வியர்த்த வியர்வன்றோ புனலும் பனியும்; (எ-று.) (வி-ம்.) கடத்தும் - கடப்போம். முகில் - மேகம். மதி நிலா. உடல்வியர்த்த - தம் உடலின் வேர்த்தொழுகிய. புனல்-மழைநீர். பனி- பனிநீர். ஐயோ: இரக்கம் பற்றிவந்த இடைச்சொல். (12) இதுவும் அது 87. | விம்முகடு விசைவனத்தின் வெம்மையினைக் | | குறித்தன்றோ விண்ணோர் விண்ணின் மைம்முகடு முகிற்றிரையிட்டு அமுதவட்ட வாலவட்டம் எடுப்ப தையோ. | (பொ-நி.) விண்ணோர், முகில் திரையிட்டு, ஆலவட்டம் எடுப்பது, வனத்தின் வெம்மையினைக் குறித்தன்றோ? (எ-று.) (வி-ம்.) விம்மு-மிகுதியான. விசை -வெம்மையின் வேகம். வெம்மை - வெப்பம். முகடு-உச்சி. முகில் திரை-மேகமாகிய திரை. அமுதவட்டம்-நிலா. ஆல வட்டம்-விசிறி. அமுதவட்டமாகிய ஆலவட்டம் என்க. (13) மரங்களின் தோற்றம் கூறியது 88. | நிலம்புடைபேர்ந் தோடாமே | | நெடுமோடி நிறுத்தியபேய் புலம்பொடுநின் றுயிர்ப்பனபோல் புகைந்துமரங் கரிந்துளவால். | |