(பொ-நி.) நெடுமோடி நிறுத்திய பேய் உயிர்ப்பனபோல் மரம் கரிந்துள; (எ-று.) (வி-ம்.) புடைபெயர்தல் - இடம்விட்டுப் பெயர்தல். நெடு-உயர்ந்த. மோடி - காளி. புலம்பொடு - தனியே. உயிர்த்தல் - மூச்சு விடுதல். உயிர்ப்பனபோல் கரிந்து புகைந்து நிற்கின்றன என்க. (14) இதுவும் அது 89. | வற்றியபேய் வாயுலர்ந்து | | வறள்நாக்கை நீட்டுவபோல் முற்றிய நீள் மரப்பொதும்பின் முதுப்பாம்பு புறப்படுமே. | (பொ-நி.) பேய் நாக்கை நீட்டுவதுபோல், பாம்பு, மரப்பொதும்பில் புறப்படும்; (எ-று.) (வி-ம்.) வற்றிய - மெலிந்த. உலர்தல் - ஈரம் புலர்தல். வறள்நாக்கு- வறண்ட நாக்கு. முற்றிய-முதிர்ந்த. பொதும்பு-பொந்து. முதுபாம்பு - பெரிய பாம்புகள். மரப்பொந்திலுள்ள பாம்புகள் தலையைவெளியே நீட்டிக்கொண்டு புறப்படுதல் நீர் வேட்கையால் நாவறளப்பெற்ற பேய்கள் வெளியே நாக்கை நீட்டுதலைப்போல் காணப்படுகின்றன என்க. (15) சூறாவளியின் இயல்பு கூறியது 90. | விழிசுழல வருபேய்த்தேர் | | மிதந்துவரு நீர்அந்நீர்ச் சுழிசுழல வருவதெனச் சூறைவளி சுழன்றிடுமால். | (பொ-நி.) பேய்த்தேர் மிதந்துவரும் நீர் ஆகும் . அந்நீர் சுழல வருவதென சூறைவளி சுழன்றிடும்; (எ-று.)
(வி-ம்.) பேய்த்தேர் - கானல். மிதந்துவரும் - மேலோங்கி வருகின்ற. சூறைவளி - சுழல்காற்று. கானலில் சுழி தோன்றுமாறு சுழற்காற் றடிக்குமென்க. (16) மணிகள் கிடத்தல் கூறியது 91. | சிதைந்தவுடற் சுடுசுடலைப் பொடியைச் சூறை | | சீத்தடிப்பச் சிதறியவப் பொடியால் செம்மை புதைந்தமணி புகைபோர்த்த தழலே போலும் போலாவேற் பொடிமூடு தணலே போலும். | |