(பொ-நி.) சூறை, சுடலைப் பொடியைச் சீத்தடிப்ப, அப் பொடியால் புதைந்த மணி தழலேபோலும்; போலாவேல் தணலேபோலும்; (எ-று.)
(வி-ம்.) சிதைந்த - உயிர்போய்ச் சிதைந்த. சூறை - சூறாவளி சுழல்காற்று. சீத்து -கிளறி. புதைந்த-மறைந்த. மணி -இரத்தினம். பொடிமூடு தணல் - நீறு பூத்த நெருப்பு. செல்வராயினார் பிணங்களின் மீதுள்ள மணியணிகளைக் கழற்றா தொழிந்தமையின் அம்மணிகள் பலவிடங்களினுங்கிடந்து விளங்கலாயின. (17) மூங்கில் முத்துதிர்தல் கூறியது 92. | மண்ணோடி அறவறந்து துறந்து அங்காந்த | | வாய்வழியே வேய்பொழியும் முத்தம் அவ்வேய் கண்ணோடிச் சொரிகின்ற கண்ணீ ரன்றேல் கண்டிரங்கிச் சொரிகின்ற கண்ணீர் போலும் | (பொ-நி.) வேய் பொழியும் முத்தம் கண்டு இரங்கிச் சொரிகின்ற கண்ணீர் போலும்; (எ-று.)
(வி-ம்.) ஓடி- வெடிப்பு ஓடி. வறந்து-வறண்டு. துறந்து பிடிப்பு நீங்கி. அங்காத்தல் - வாய்பிளத்தல். வேய்-மூங்கில். முத்தம்-முத்து. கண்ணோடி- கண்ணோட்டம் செய்து; கணுக்கள் வெடித்து. கண்டிரங்கி-கண்டு மனம் இரங்கி; கண்திரங்கி. கணுக்கள் சுருங்கி எனவும் கூறலாம். முதிர்ந்த மூங்கில்களில் முத்துக்கள் உண்டாகி வெடித்து வெளிப்படுதலை இவ்வாறு பாலைநில வெம்மைக் கிரங்கிக் கண்ணீர் சொரிவதாகக் கற்பித்தார். (18) இதுவும் அது 93. | வெடித்தகழை விசைதெறிப்பத் தரைமேல் முத்தம் | | வீழ்ந்தனஅத் தரைபுழுங்கி அழன்று மேன்மேற் பொடித்தவியர்ப் புள்ளிகளே போலும் போலும் போலாவேல் கொப்புளங்கள் போலும் போலும். | (பொ-நி.) கழைதெறிப்ப வீழ்ந்தன ஆகிய முத்தம் வியர்ப்புள்ளிகளே போலும், போலாவேல் கொப்புளங்கள் போலும்; (எ-று.)
(வி-ம்.) கழை-மூங்கில். விசை-விரைவு, தெறிப்ப-வெடிக்க. புழுங்கி - வருந்தி. புள்ளி-வியர்வைத் துளிகள், முன்பாட்டிற் கண்ணீர்த்துளிகளெனக் கற்பித்தவர் இப்பாட்டில் வியர்வைத் துளிகளாகவுங் கொப்புளங்களாகவுங் கூறினார். (19) |