பக்கம் எண் :

காடு பாடியது39


காற்றின் இயல்பு கூறியது

94.பல்கால்திண் திரைக்கரங்கள் கரையின் மேன்மேற்
    பாய்கடல்கள் நூக்குமது அப்படர்வெங் கானிற்
செல்காற்று வாராமல் காக்க அன்றோ
   திசைக்கரியின் செவிக்காற்றும் அதற்கே யன்றோ.
 

     (பொ-நி.)  கடல்,  திரைக்கரங்களை  நூக்கும்  அது  காற்றுவாராமல்
காக்க  அன்றோ?  கரியின்  செவிக்காற்றும் அதற்கே  அன்றோ? (எ-று.)

     (வி-ம்.) பல்கால் - பலமுறை. திரைக்கரம்-அலையாகிய கை. நூக்குதல்
-தள்ளுதல். திசை-திக்கு. கரி- யானை,  செவிக்காற்று  எழுப்பலும்  அதற்கே
என்க. அதற்கு - அதனை  வாராமற்  காக்க.                       (20)

வெப்பநிலை கூறியது

95.முள்ளாறும் கல்லாறும் தென்னர் ஓட
    மின்னொருநாள் வாளபயன் முனிந்த போரின்
வெள்ளாறும் கோட்டாறும் புகையான் மூட
   வெந்தவனம் இந்தவனம் ஒக்கில் ஒக்கும்.

     (பொ-நி.) தென்னர் ஓட, அபயன் முனிந்த போரில் புகையால்  மூட வெந்தவனம்,  இந்தவனம்  ஒக்கும்;  (எ-று.)

     (வி-ம்.) முள் - முட்களையுடைய, ஆறு - வழி. கல்- பருக்கைக் கல். தென்னர்- பாண்டியர். முனிதல் - வெகுளல்.  வெள்ளாறு:  ஆற்றின் பெயர். கோட்டாறு: ஊரின் பெயர். வனம் - பகை  வேந்தரின் காவற்காடு.     (21)

மணல் இயல்பு கூறியது

96. அணிகொண்ட குரங்கினங்கள
     அலைகடலுக்கு அப்பாலை
மணலொன்று காணாமல்
   வரைஎடுத்து மயங்கினவே.

     (பொ-நி.) குரங்கினங்கள், கடலுக்கு மணல்  ஒன்றுகாணாமல்,  வரை
எடுத்து  மயங்கின;  (எ-று.)