(பொ-நி.) கானகத்து அணங்கினுக்குப் பூதலம் பழங்கோயில்; என்னினும், புதிய கோயில் உண்டு, அது விளம்புவாம்; (எ-று.) (வி-ம்.) ஓதிவந்த-சொல்லப்பட்ட. உறைதல்-தங்கியிருத்தல். அணங்கு -காளி. அயன்-பிரமன். பூதலம்-உலகம். (1) கோயில் கடைகால் இயல்பு கூறியது 98. | வட்ட வெண்குடைச் சென்னி மானதன் | | வாளின் வாயினால் மறலி வாயிடைப் பட்ட மன்னர்தம் பட்ட மங்கையர் பரும ணிக்கருத் திருஇ ருத்தியே. |
(பொ-நி.) மானதன் வாளின் வாயினால் பட்டமன்னர்தம் மங்கைய(ருடைய) மணி(யைக்) கரு(வாக) இருத்தி; (எ-று.) (வி-ம்.) சென்னி-சோழன். மானதன்-குலோத்துங்கன். மறலி- இயமன். பட்ட-வீழ்ந்த. பட்டமங்கையர்-பட்டத்துத் தேவியர். மணி-நகைகளிற் பதித்த இரத்தினம். திரு-அழகிய. கரு இருத்தி- அடித்தளம் அமைத்து.திருக்கரு இருத்தி என இயைக்க. புதுக்கட்டிடத்திற்குக் கடைகால் இடுங்கால் பொன் மணிகளை இடல் மரபென்க. (2) சுவர் இயல்பு கூறியது 99. | துவர்நி றக்களிற்று உதிய ரேவலின் | | சுரிகை போர்முகத்து உருவி நேரெதிர்த்து அவர்நி ணத்தொடுஅக் குருதி நீர்குழைத்து அவர்க ருந்தலைச் சுவர டுக்கியே. |
(பொ-நி.) உதியர் ஏவலின், எதிர்த்தவர் நிணத்தொடு, அக் குருதிநீர் குழைத்து, கருந்தலைச் சுவர் அடுக்கி; (எ-று.) (வி-ம்.) துவர்-சிவப்பு. உதியர்-சேரர். சுரிகை உருவி என இயைக்க. சுரிகை-உடைவாள். போர் முகம்-போர்க்களம். எதிர்த்தவர்-சேரநாட்டு வீரர். நிணம் -கொழுப்பாகிய சேறு. குருதி-செந்நீர். அவர் - அவ்வீரர்கள். கரும் தலை-பெரிய தலை. (3) |