தூண் உத்திர இயல்பு கூறியது 100. | அறிஞர் தம்பிரான் அபயன் வாரணம் | | அரசர் மண்டலத் தரண றப்பறித்து எறித ரும்பெருங் கணைம ரங்கள்கொண்டு எழுது தூணொடு உத்திர மியற்றியே. |
(பொ-நி.) வாரணம் பறித்து எறிதரும் கணைமரங்கள் கொண்டு தூணொடு உத்திரம் இயற்றி; (எ-று.) (வி-ம்.) பிரான் - தலைவன். வாரணம் - யானை. அரண்- காவற்காடு. கணைமரம்-கோட்டை வாயிற்கதவின் குறுக்கே இடும் மரம். எழுதுதூண் -பதித்த தூண். (4) துலாம் பா இயல்பு கூறியது 101. | கடித ழிந்துபோர் மிதிலை யிற்படும் | | கரிம ருப்பினைத் திரள்து லாமெனும் படிப ரப்பிஅப் பரும யானையின் பழுஎ லும்பினில் பாஅ டுக்கியே | (பொ-நி.) கரி மருப்பினைத் துலாம் எனும்படி பரப்பியானையின் பழு எலும்பினில் பா அடுக்கி; (எ-று) (வி-ம்.) மிதிலை - மிதிலைநகரம். கரி-யானை. மருப்பு-தந்தம். துலாம் -உத்திரத்தின்மேல் முக்கோண வடிவுடன் நிறுத்திய மரம். பா - கூரையில் இருபக்கமும் பரப்பும் கைகள். (5) நாசிகை இயல்பு கூறியது 102. | மீளி மாவுகைத்து அபயன் முன்னொர்நாள் | | விருத ராசரைப் பொருது கொண்டபோர் ஆளி வாரணங் கேழல் சீயமென்று அவைநி ரைத்துநா சிகையி ருத்தியே. |
(பொ-நி.) அபயன், உகைத்து, பொருது, கொண்ட அவை நிரைத்து நாசிகை இருத்தி; (எ-று.) (வி-ம்.) மீளி வலிமை: மா-யானை. விருது-வெற்றிச் சின்னம். ஆளி -யாளி. வாரணம்-யானை. கேழல்- பன்றி. சீயம் - சிங்கம். இவை எழுதிய கொடிகள் என்க. நிரைத்து-வரிசையாக வைத்து. நாசிகை-கூடல்வாய். (6) |