மேற்கூரை இயல்பு கூறியது 103. | துங்க பத்திரைச் செங் களத்திடைச் | | சோள சேகரன் வாளெ றிந்தபோர் வெங்க தக்களிற் றின்ப டத்தினால் வெளிஅ டங்கவே மிசைக விக்கவே |
(பொ-நி.) சோளசேகரன், செங்களத்திடை, எறிந்த களிற்றின் படத்தினால் மிசை கவிக்க; (எ-று.) (வி-ம்.) செங்களம்-போர்க்களம், சோளன்-சோழன்-குலோத்துங்கன். கதம்-சினம். வெளி அடங்க-வெற்றிடமில்லாது மறையும்படி. படம்-முகபடாம். மிசை-கூரை. (7) கோபுர மதில் இயல்பு கூறியது 104. | கொள்ளிவாய்ப் பேய்காக்கும் | | கோபுரமும் நெடுமதிலும் வெள்ளியால் சமைத்ததென வெள்ளெலும்பி னால்சமைத்தே | (பொ-நி.) கோபுரமும் மதிலும் எலும்பினாற் சமைத்து; (எ-று) (வி-ம்.) சமைத்தல் - ஆக்கல் . (8) மகரதோரண இயல்பு கூறியது 105. | காரிரும்பின் மகரதோ ரணமாகக் கரும்பேய்கள் | | ஓரிரண்டு கால்நாட்டி ஓரிரும்பை மிசைவளைத்தே. | (பொ-நி.) பேய்கள், தோரணமாக, இரண்டு கால், இரும்பை மிசை வளைத்து; (எ-று.) (வி-ம்.) மகரம்-சுறாமீன். தோரணம்-குறுக்காகக் கட்டும் கொடி. மிசை -மேல். (9) |