அணி செயல் வகை கூறியது 106. | மயிற்கழுத்தும் கழுத்தரிய மலர்ந்தமுகத் | | தாமரையும் மருங்கு சூழ்ந்த எயிற்கழுத்தும் நிணக்கொடியும் இளங்குழவி பசுந்தலையும் எங்கும் தூக்கி. | (பொ-நி.) மயில் கழுத்தும், முகத்தாமரையும், நிணக்கொடியும், பசுந்தலையும் எங்கும் தூக்கி; (எ-று.) (வி-ம்.) கழுத்தரிதல் தேவிக்குப் பலி இடற்கு. மருங்கு-பக்கம். எயில் -மதில். அழுத்தல்-செருகுதல். நிணக்கொடி-கொழுப்பாலான கொடிச்சீலை. பசுந்தலை-இளமையுள்ள தலை. குழவி-குழந்தை. (10) இதுவும் அது 107. | பணியாத வழுதியர்தம் பாய்களிற்றின் | | செவிச்சுளகு பலவும் தூக்கி மணியூசல் எனமதுரை மகரதோ ரணம்பறித்து மறித்து நாட்டி. | (பொ-நி.) செவிச்சுளகு பலவும் தூக்கி, மணி ஊசலென, மகர தோரணம் நாட்டி; (எ-று.) (வி-ம்.) வழுதியர்-பாண்டியர். சுளகு-முறம்.தூக்குதல்-தொங்கவிடுதல், மறித்து-மீண்டும். (11) இதுவும் அது 108. | பரிவிருத்தி அலகிட்டுப் பசுங்குருதி | | நீர்தெளித்து நிணப்பூச் சிந்தி எரிவிரித்த ஈமவிளக்கு எம்மருங்கும் ஏற்றியதோர் இயல்பிற் றாலோ. | (பொ-நி.) அலகிட்டு. நீர் தெளித்து, பூச்சிந்தி, விளக்கேற்றியதோர் இயல்பிற்று; (எ-று.) (வி-ம்.) பரிவிருத்தி-பரிவு இருத்தி-அன்பை நிலையுறச் செய்து. அக்கோவில்-சுற்றுப்புறம். குருதி-செந்நீர். நிணம்-கொழுப்பு. எரி-தீ. ஈமம் -சுடலை. (12) |