வழிபாட்டியல்பு கூறியது 109. | சலியாத தனியாண்மைத் தறுகண் வீரர் | | தருகவரம் வரத்தினுக்குத் தக்க தாகப் பலியாக உறுப்பரிந்து தருதும் என்று பரவுமொலி கடலொலிபோல் பரக்கு மாலோ. |
(பொ.நி.) வீரர் "வரம் தருக; தக்கதாக உறுப்பரிந்து தருதும்" என்று பரவும் ஒலி பரக்கும்; (எ-று.) (வி-ம்.) சலியாத-மனந்தளராத. தறுகண்-அஞ்சாமை. தருக-தருவாயாக. பலி-கொடுக்கின்ற கடன். உறுப்பு-அவயவம். பரவுதல்-துதித்தல். பரக்கும் -பரவும். (13) இதுவும் அது 110. | சொல்லரிய ஓமத்தீ வளர்ப்ப ராலோ | | தொழுதிருந்து பழுவெலும்பு தொடரவாங்கி வல்லெரியின் மிசைஎரிய விடுவ ராலோ வழிகுருதி நெய்யாக வார்ப்ப ராலோ. |
(பொ-நி.)ஓமத்தீ வளர்ப்பர்; எலும்பு வாங்கி எரியவிடுவர்; குருதி நெய்யாக வார்ப்பர்; (எ-று.) (வி-ம்.) பழுஎலும்பு - விலாஎலும்பு. தொடர - ஒன்றோடொன்று தொடர்புற்று நிற்க. வாங்கி-பிடுங்கி. வல் எரி-மிகு நெருப்பு. குருதி-செந்நீர். வார்ப்பர்-ஊற்றுவர். (14) இதுவும் அது 111. | அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவ ராலோ | | அரிந்தசிரம் அணங்கின்கைக் கொடுப்ப ராலோ கொடுத்தசிரம் கொற்றவையைப் பரவு மாலோ குறையுடலம் கும்பிட்டு நிற்கு மாலோ. | (பொ-நி.) சிரத்தை அரிவர்; அரிந்த சிரம் கொடுப்பர்; கொடுத்த சிரம் பரவும்; குறை உடலம் கும்பிட்டு நிற்கும்; (எ-று.) (வி-ம்.) அடிக்கழுத்து - கழுத்தின் முதலிடம். அரிவர் - அறுப்பர். அணங்கு-காளி. கொற்றவை - காளி. பரவும் - துதிக்கும். குறை உடலம் -தலையற்ற உடம்பு. (15) |