5. தேவியைப் பாடியது [ஈண்டு அக்கோயிலில் உறையும் காளி கூறப்படுகின்றாள்.காளி அணிந்திருக்கும் சிலம்பு, பொட்டு, அவளது கூத்து, கொங்கை, உடை, வயிறு, மேலாடை, கை, உதடு, முகம், காதணி மாலை என்பன அடைவே கூறப்படுமாறு வியப்புச்சுவை நிறைந்து இன்பஞ் செய்வதாகும்.] தோற்றுவாய் 121. | உவையுவை உளஎன் றெண்ணி | | உரைப்ப தென்உரைக் கவந்த அவை அவை மகிழ்ந்த மோடி அவயவம் விளம்பல் செய்வாம், |
(பொ-நி.) உவை உவை உள என்று உரைப்பதென்; அவை அவை மகிழ்ந்த மோடி அவயவம் விளம்பல் செய்வாம்; (எ-று.) (வி-ம்.) உவை உவை உள என்று-காளிபக்கம் இன்னின்ன பொருள் இருக்கின்றன என்று, அவை அவை மகிழ்ந்த-அவ்வெல்லாப் பொருளையும் ஏற்று மகிழ்ந்த, மோடி-காளி. (1) இணையடிச் சிறப்புக் கூறியது 122. | ஒருமலை மத்துவலித்து உலவுக யிற்றினுமற்று | | உலகுப ரித்தபணத்து உரகவ டத்தினும்அப் பருமணி முத்துநிரைத்து உடுமணி தைத்தஇணைப் பரிபுரம் வைத்ததளிர்ப் பதயுக ளத்தினளே. |
(பொ-நி.) கயிற்றினும்வடத்தினும் முத்து நிரைத்து மணிதைத்த பரிபுரம் வைத்த பதத்தினள்; (எ-று.) (வி-ம்.) மலை-மந்தரமலை. மத்து - தயிர்கடைமத்து. வலித்து- மேலே சுற்றி. கயிறு-கயிறாயிருந்த வாசுகி. பரித்தல்-தாங்குதல். பணம்- படம். உரகம்- (ஆதிசேடனாகிய) பாம்பு. அ -அழகிய. உடுமணி(யாகிய)பருமணி முத்து நிரைத்துத் தைத்த என இயைக்க. மணிமுத்து - அழகிய முத்து. உடுமணி - வானமீன்கள். இணை- இரண்டு. பரிபுரம் - சிலம்பு. உகளம்- இணை. 'உகள பதத்தின்' என விகுதி பிரித்துக் கூட்டுக. (2) |