பக்கம் எண் :

தேவியைப் பாடியது51


உடைச் சிறப்புக் கூறியது

125.பரிவக லத்தழுவிப் புணர்கல விக்குருகிப்
      படர்சடை முக்கணுடைப் பரமர்கொ டுத்தகளிற்று
உரிமிசை யக்கரியிற் குடரொடு கட்செவியிட்டு
     ஒருபுரி இட்டுஇறுகப் புனையுமு டுக்கையளே.

     (பொ-நி.)  பரமர்  கலவிக்கு  உருகிக்கொடுத்த  களிற்று  உரிமிசை,
ஒருபுரி இட்டு இறுகப் புனையும் உடுக்கையள்; (எ-று.)

     (வி-ம்.) பரிவு - காமத்துன்பம்.  கலவி - ஒன்றுபட்ட  இன்பம். படர்
-விரித்த. பரமர் - சிவனார்.  உரி - தோல்.  கரி - யானை.  குடர் - குடல்;
ஈற்றுப்போலி, கட்செவி-பாம்பு. புரி-முறுக்கிய கயிறு. உடுக்கை - அரைக்கச்சு.
                                                            (5)

வயிற்றின் சிறப்புக் கூறியது

126.கலைவளர் உத்தமனைக் கருமுகில் ஒப்பவனைக்
      கரடத டக்கடவுட் கனகநி றத்தவனைச்
சிலைவளை வுற்றவுணத் தொகைசெக விட்டபரித்
     திறலவ னைத்தரும்அத் திருஉத ரத்தினளே.

     (பொ-நி.)்   உத்தமனை,   முகில்   ஒப்பவனை,  கனகநிறத்தவனை,
திறலவனை, தரும்அத்திரு உதரத்தினள்; (எ-று.)

     (வி-ம.்)  உத்தமன் - பிரமன். முகில்  ஒப்பவன் - திருமால்.  கரடம்
-மதம் பாய் சுவடு. கனகம்-பொன். கனக நிறத்தவன்-யானைமுகன்.  அவுணர
்-அசுரர்.  செக-அழிய.  பரி-மிக்க.  திறலவன்-முருகன்.  தரும்-பெற்ற.  திரு
-அழகு. உதரம்-வயிறு.                                         (6)

மேலாடைச் சிறப்புக் கூறியது

127.கவளம தக்கரடக் கரியுரி வைக்கயிலைக்
      களிறுவி ருப்புறும்அக் கனகமு லைத்தரளத்
தவளவ டத்திடையிற் பவளமொ டொத்தெரியத்
     தழலுமிழ் உத்தரியத் தனிஉர கத்தினளே.

      (பொ-நி.) கயிலைக்களிறு விருப்புறும் முலைத்  தரளவடத்திடையில்
பவளமொடு ஒத்து எரிய தழல் உமிழ் உரகத்தினள். (எ-று.)