பக்கம் எண் :

52கலிங்கத்துப்பரணி

     (வி-ம்.) கவளம்-உணவுருண்டை.  மதக்கரடம்-மத நீர்  வரும் சுவடு.
கயிலைக் களிறு-சிவன். கனகம்-பொன்.  தரளம்-முத்து.  தவளம்-வெண்மை.
வடம் - மாலை.  உத்தரியம் - மேலாடை.  உரகம்-பாம்பு.  உமிழ்  உரகம்,
உத்தரியமாகிய உரகம் எனத் தனித்தனி இயைக்க.                  (7)

கையின் சிறப்புக் கூறியது

128.அரியுமி டற்றலையிட்டு அலைகுரு திக்கெதிர்வைத்து
      அறவும டுத்தசிவப் பதனைமு ழுத்திசையின்
கரிகர டத்தொளையின் கலுழியி டைக்கழுவிக்
     கருமைப டைத்தசுடர்க் கரகம லத்தினளே.

     (பொ-நி.) குருதிக்கு  எதிர்வைத்து  மடுத்த,  சிவப்பதனைக்  கலுழி
இடைக்கழுவிக் கருமை படைத்த கர கமலத்தினள். (எ-று.)

     (வி-ம்.) அரியும்-அறுக்கும். மிடறு-கழுத்து.  அலையிட்டு-அலையை
உண்டாக்கி, அலை-நான்குபுறமும் பரக்கின்ற. குருதி-செந்நீர் .எதிர்வைத்தல்
-மொள்ளுதல். மடுத்தல்-பருகல்.  கரி-யானை.  கலுழி-வெள்ளம். கரகமலம்
்-கைத்தாமரை.                                               (8)

உதட்டின் சிறப்புக் கூறியது

129.சிமையவ ரைக்கனகத் திரளுரு கப்பரவைத்
      திரைசுவ றிப்புகையத் திசைசுடு மப்பொழுதத்து
இமையவ ரைத்தகைதற்கு இருளுமி டற்றிறைவதற்கு
     இனியத ரத்தமுதக் கனியத ரத்தினளே

     (பொ-நி.) திரள் உருக, திரை புகைய, திசை  சுடும்  அப்பொழுது,
இருளும் மிடற்று இறைவற்கு அமுதக்கனி அதரத்தினள்; (எ-று.)

     (வி-ம்.) சிமையக்கனவரைத்திரள் என இயைக்க. சிமையம்-கொடுமுடி.
கனகவரை-மேருமலை. திரள் - கூட்டம்.  பரவை - கடல்.  திரை - அலை.
அப்பொழுது- ஆலகாலவிடம்  எழுந்தபொழுது.  இமயவர்-தேவர். தகைதல்
-(விடம்பற்றாமல்)அடக்கல், மிடறு-கழுத்து,  இறைவன்-சிவன்,  தரம்-தன்மை.
கனி-கொவ்வைக்கனி,  அதரம்-உதடு.                             (9)