(வி-ம்.) கவளம்-உணவுருண்டை. மதக்கரடம்-மத நீர் வரும் சுவடு. கயிலைக் களிறு-சிவன். கனகம்-பொன். தரளம்-முத்து. தவளம்-வெண்மை. வடம் - மாலை. உத்தரியம் - மேலாடை. உரகம்-பாம்பு. உமிழ் உரகம், உத்தரியமாகிய உரகம் எனத் தனித்தனி இயைக்க. (7) கையின் சிறப்புக் கூறியது 128. | அரியுமி டற்றலையிட்டு அலைகுரு திக்கெதிர்வைத்து | | அறவும டுத்தசிவப் பதனைமு ழுத்திசையின் கரிகர டத்தொளையின் கலுழியி டைக்கழுவிக் கருமைப டைத்தசுடர்க் கரகம லத்தினளே. | (பொ-நி.) குருதிக்கு எதிர்வைத்து மடுத்த, சிவப்பதனைக் கலுழி இடைக்கழுவிக் கருமை படைத்த கர கமலத்தினள். (எ-று.) (வி-ம்.) அரியும்-அறுக்கும். மிடறு-கழுத்து. அலையிட்டு-அலையை உண்டாக்கி, அலை-நான்குபுறமும் பரக்கின்ற. குருதி-செந்நீர் .எதிர்வைத்தல் -மொள்ளுதல். மடுத்தல்-பருகல். கரி-யானை. கலுழி-வெள்ளம். கரகமலம் ்-கைத்தாமரை. (8) உதட்டின் சிறப்புக் கூறியது 129. | சிமையவ ரைக்கனகத் திரளுரு கப்பரவைத் | | திரைசுவ றிப்புகையத் திசைசுடு மப்பொழுதத்து இமையவ ரைத்தகைதற்கு இருளுமி டற்றிறைவதற்கு இனியத ரத்தமுதக் கனியத ரத்தினளே |
(பொ-நி.) திரள் உருக, திரை புகைய, திசை சுடும் அப்பொழுது, இருளும் மிடற்று இறைவற்கு அமுதக்கனி அதரத்தினள்; (எ-று.) (வி-ம்.) சிமையக்கனவரைத்திரள் என இயைக்க. சிமையம்-கொடுமுடி. கனகவரை-மேருமலை. திரள் - கூட்டம். பரவை - கடல். திரை - அலை. அப்பொழுது- ஆலகாலவிடம் எழுந்தபொழுது. இமயவர்-தேவர். தகைதல் -(விடம்பற்றாமல்)அடக்கல், மிடறு-கழுத்து, இறைவன்-சிவன், தரம்-தன்மை. கனி-கொவ்வைக்கனி, அதரம்-உதடு. (9) |