பக்கம் எண் :

தேவியைப் பாடியது53


வாயின் சிறப்புக் கூறியது

130.உருகுத லைத்தொ டையற்கு வமைய றச்சுழல்வுற்று
     உலவுவி ழிக்கடைபட்டு உடல்பகை யற்றொழியத்
திருகுரவைக் கிளவிச் சிறுகுத லைப்பவளச்
   சிறுமுறு வற்றரளத் திருவத னத்தினளே.

     (பொ-நி.) விழிக்கடைபட்டு, உருகு தலைத் தொடையற்கு உடல்பகை அற்று ஒழிய, குரவை, குதலை, முறுவல் தரளத் திருவதனத்தினள்; (எ-று.)

     (வி-ம்.)  உருகு  -  ஆசையால்  உருகுகின்ற  தலைதொடையன் -
தலைமாலையணிந்த  சிவன். சுழல்வுற்று- சுழன்று. விழிக்கடை -கடைக்கண்
பார்வை . உடல்பகை - காமநோய்.  குரவை- நாவை   உருட்டிச் செய்யும்
மகிழ்ச்சியொலி. பவளச் சிறுமுறுவல் -பவளம் போன்ற உதட்டில் தோன்றும
புன்முறுவல்.  தரளம் - பற்களாகிய முத்துக்கள். வதனம்-முகம். விழிக்கடை
எழுப்பிய காமநோய்  ஒழியுமாறு  செய்தன குரவை, குதலை, முறுவல் என
இவை என்க.                                               (10)

திருமுகச் சிறப்புக் கூறியது

131.அருமறை யொத்தகுலத்து,அருணெறியொத்த குணத்து
     அபயனு தித்தகுலத்து உபயகு லத்துமுதல்
திருமதி யொக்குமெனத் தினகர னொக்குமெனத்
   திகழ்வத னத்தினிடைத் திலகவ னப்பினளே.

     (பொ-நி.)  அபயன் உதித்த  உபயகுலத்து முத(லாகிய)மதி, தினகரன் ஒக்குமென, வதனத்திடை, திலக வனப்பினள். (எ-று.)

     (வி-ம்.)   குலத்து   -   குல    ஒழுக்கத்தினையுடைய.   குணத்து
குணத்தினையுடைய. குலத்து-மேன்மையான. உபய குலம்-தந்தைதாயர் குலம்.
முதல் - முதல்வனாகிய. மதி - திங்கள். தினகரன் - ஞாயிறு. வதனம்-முகம்.
திலகம் - பொட்டு. வனப்பு-அழகு.                               (11)

பேருருவச் சிறப்புக் கூறியது

132.அண்டமுறு குலகிரிகள்
     அவளொருகால் இருகாதில்
கொண்டணியின் குதம்பையுமாம்
   கோத்தணியின் மணிவடமாம்.