வாயின் சிறப்புக் கூறியது 130. | உருகுத லைத்தொ டையற்கு வமைய றச்சுழல்வுற்று | | உலவுவி ழிக்கடைபட்டு உடல்பகை யற்றொழியத் திருகுரவைக் கிளவிச் சிறுகுத லைப்பவளச் சிறுமுறு வற்றரளத் திருவத னத்தினளே. | (பொ-நி.) விழிக்கடைபட்டு, உருகு தலைத் தொடையற்கு உடல்பகை அற்று ஒழிய, குரவை, குதலை, முறுவல் தரளத் திருவதனத்தினள்; (எ-று.)
(வி-ம்.) உருகு - ஆசையால் உருகுகின்ற தலைதொடையன் - தலைமாலையணிந்த சிவன். சுழல்வுற்று- சுழன்று. விழிக்கடை -கடைக்கண் பார்வை . உடல்பகை - காமநோய். குரவை- நாவை உருட்டிச் செய்யும் மகிழ்ச்சியொலி. பவளச் சிறுமுறுவல் -பவளம் போன்ற உதட்டில் தோன்றும புன்முறுவல். தரளம் - பற்களாகிய முத்துக்கள். வதனம்-முகம். விழிக்கடை எழுப்பிய காமநோய் ஒழியுமாறு செய்தன குரவை, குதலை, முறுவல் என இவை என்க. (10) திருமுகச் சிறப்புக் கூறியது 131. | அருமறை யொத்தகுலத்து,அருணெறியொத்த குணத்து | | அபயனு தித்தகுலத்து உபயகு லத்துமுதல் திருமதி யொக்குமெனத் தினகர னொக்குமெனத் திகழ்வத னத்தினிடைத் திலகவ னப்பினளே. | (பொ-நி.) அபயன் உதித்த உபயகுலத்து முத(லாகிய)மதி, தினகரன் ஒக்குமென, வதனத்திடை, திலக வனப்பினள். (எ-று.)
(வி-ம்.) குலத்து - குல ஒழுக்கத்தினையுடைய. குணத்து குணத்தினையுடைய. குலத்து-மேன்மையான. உபய குலம்-தந்தைதாயர் குலம். முதல் - முதல்வனாகிய. மதி - திங்கள். தினகரன் - ஞாயிறு. வதனம்-முகம். திலகம் - பொட்டு. வனப்பு-அழகு. (11) பேருருவச் சிறப்புக் கூறியது 132. | அண்டமுறு குலகிரிகள் | | அவளொருகால் இருகாதில் கொண்டணியின் குதம்பையுமாம் கோத்தணியின் மணிவடமாம். | |