பக்கம் எண் :

பேய்களைப் பாடியது55


தோற்றுவாய்

134.எவ்வணங்கும் அடிவணங்க
     இப்பெருமை படைத்துடைய
அவ்வணங்கை அகலாத
   அலகைகளை இனிப்பகர்வாம்.

     (பொ-நி.) அடிவணங்கப்  பெருமை   படைத்துடைய   அணங்கை
அகலாத அலகைகளைப் பகர்வாம்; (எ-று.)

     (வி-ம்.)அணங்கு-தெய்வமகளிர். அணங்கு-காளி. அலகை-பேய். (1)

பேய்களின் கைகால் இயல்பு கூறியது

135. பெருநெ டும்பசி பெய்கல மாவன
     பிற்றை நாளின்முன் னாளின் மெலிவன
கருநெ டும்பனங் காடுமு ழுமையுங்
   காலுங் கையுமு டையன போல்வன.

     (பொ-நி.) பசிபெய் கலமாவன; மெலிவன; கையும் காலும் உடையன; பனங்காடு போல்வன; (எ-று.)

     (வி-ம்.)கலம் - ஏனம். பிற்றை நாள் - மறுநாள். கரு-கருமை நிறம்.
மெலிவன பசியா லென்க.                                     (2)

வாய், வயிறு முழந்தாள் இயல்பு கூறியது

136.வன்பி லத்தொடு வாதுசெய் வாயின
     வாயி னால்நிறை யாதவ யிற்றின
முன்பி ருக்கின்மு கத்தினு மேற்செல
   மும்மு ழம்படும் அம்முழந் தாளின.

    (பொ-நி.)     வாயின,      வயிற்றின,      முழந்தாளின; (எ-று.)

    (வி-ம்.)  பிலம்    -   குகை.    வாதுசெய்தல்-(தாமே   பெரியன
என்று)வழக்கிடல்.   இருக்கின்-குத்துக்காலிட்டு உட்கார்ந்தால்.  முகத்தினும்
மேற்செல-அவற்றின்   முழந்தாள்  அவற்றின்  முகத்துக்கும்  மேற்பட்டுச் செல்லுதல் என்க.                                             (3)