பக்கம் எண் :

56கலிங்கத்துப்பரணி

உடம்பின் இயல்பு கூறியது

137. வெற்றெ லூம்பைந ரம்பின்வ லித்துமேல்
     வெந்தி லாவிற கேய்ந்தவு டம்பின
கொற்ற லம்பெறு கூழிலம் எங்களைக்
   கொள்வ தேபணி யென்றுகு ரைப்பன

     (பொ-நி.) விறகு ஏய்ந்த உடம்பின.  கூழ் இலம்;  பணி கொள்வதே
என்று குரைப்பன; (எ-று.)

     (வி-ம்.) வலித்தல் - கட்டல். மேல் வெந்து இலா-மேற்புறம் வேகாத.
ஏய்ந்த-ஒத்த.  உள்வயிறு வெந்தும் மேல் தெரியும்  விறகுபோன்ற எலும்பு
வேவவில்லை யென்க.  கொல்தலம் - கொல்லும்  இடமாகிய போர்க்களம்.
கூழ் - நிணக்கூழ்.   கொள்வதே - கொள்ளலாமோ.   பணி - குற்றேவல்.
குரைப்பன-ஓல மிடுவன. (4)

கன்னம், விழி, இயல்பு கூறியது

138.உள்ளொ டுங்கியி ரண்டுமொன் றாகவே
     ஒட்டி ஒட்டிவி டாதகொ டிற்றின
கொள்ளி கொண்டிரண் டேமுழை யுட்புகின்
   குன்று தோன்றுவ போலவி ழிப்பன.

     (பொ-நி.)   ஒட்டுவிடாத   கொடிற்றின;  குன்றுதோன்றுவ  போல
விழிப்பன; (எ-று.)

     (வி-ம்.) இரண்டும்-இரண்டு கன்னமும். கொடிறு-கன்னம்.  கொள்ளி-
கொள்ளிக்கட்டை. ஏம், ஏமம்-பாதுகாப்பான. முழை-குகை. புகின் -ஒருவன்
புகுந்தால் (அப்பொழுது). குன்று-மலை.                          (5)

முதுகு, உந்தி இயல்பு கூறியது

139.வற்ற லாகஉ லர்ந்தமு துகுகள்
     மரக்க லத்தின்ம றிபுற மொப்பன
ஒற்றை வான்தொளைப் புற்றெனப் பாம்புடன்
   உடும்பு முட்புக்கு றங்கிடும் உந்திய .

     (பொ-நி.) முதுகுகள்  மரக்கலத்தின்  மறிபுறம்  ஒப்பன.  பாம்புடன்
உடும்பும் உறங்கிடும் உந்திய; (எ-று.)