பக்கம் எண் :

பேய்களைப் பாடியது59


    (பொ-நி.)அபயன் பொரூஉம் களத்தில் அரசர் சிரம் சொரி மூளைச் சேற்றில் வழுக்கி விழுந்திட கால்முடமானவும்; (எ-று.)

     (வி-ம்.) ஆள்-ஆண்மை வீரர்கள்.  சீறு-சினந்து கொள்கின்ற களிறு-
யானை. அபயன் - குலோத்துங்கன்.  பொரூஉம் - போர்செய்கின்ற. களம்-
போர்க்களம் சொரி-சிந்துகின்ற. சிரம்-தலை. மொழி-கால் மூட்டு.      (12)

கைம்முடப் பேயைக் கூறியது

146.அந்த நாளக்க ளத்தடு கூழினுக்கு
    ஆய்ந்த வெண்பல்ல ரிசியுரற்புக
உந்து போதினிற் போதகக் கொம்பெனும்
   உலக்கை பட்டுவ லக்கைசொற் றானவும்.

     (பொ-நி.)   வெண்பல் அரிசி, உரல்புக,  உந்து போதினில் போதகக் கொம்பெனும் உலக்கைபட்டு வலக்கை சொற்று ஆனவும்; (எ-று.)

     (வி-ம்.) அந்தநாள்-குலோத்துங்கன் போர் புரிந்த நாள். அக்களம்-
போர்க்களம்.   அடுதல்  -  சமைத்தல.்   கூழ்  - நிணக்கூழ்.  ஆய்ந்த-
ஆராய்ந்தெடுத்த. வெண்பல் அரிசி-வெள்ளைநிறமுள்ள பற்களாகிய அரிசி.
உந்துதல் - குற்றுதல். போதகக் கொம்பு-யானைத்தந்தம். சொற்று-சொற்றை.
ஊனம்-முடம்.                                             (13)

குருட்டுப் பேயைக் கூறியது

147. விருத ராசப யங்கரன் முன்னொர்நாள்
    வென்ற சக்கரக் கோட்டத்தி டைக்கொழுங்
குருதி யுங்குட ருங்கலந்து அட்டவெங்
   கூழ்தெ றித்தொரு கண்குரு டானவும்.

    (பொ-நி.)     சக்கரக்கோட்டத்திடை,    கூழ்    தெறித்து   ஒரு
கண்குருடானவும்; (எ-று.)

     (வி-ம்.)   விருதராச   பயங்கரன்  -  குலோத்துங்கன்;   வெற்றிச்
சின்னங்களையுடைய       அரசர்களுக்கு       அச்சமுண்டாக்குவோன்.
சக்கரக்கோட்டம்-சக்கரக்கோட்டம்  என்னும் ஊர்.  குருதி-செந்நீர். அட்ட-சமைத்த. வெம்கூழ்-சுடுகூழ். தெறித்தல்-படுதல்.                    (14)