ஊமைப்பேயைக் கூறியது 148. | வண்டல் பாய்பொன்னி நாடனை வாழ்த்திமா | | மதுரை வெங்களத் தேமது ரிக்கஅட் டுண்ட கூழொடு நாவுஞ்சு ருண்டுபுக்கு உள்வி ழுந்தற ஊமைக ளானவும் | (பொ-நி.) மதுரைக்களத்தே, பொன்னிநாடனை வாழ்த்திஅட்ட கூழொடு, நாவும் சுருண்டு ஊமைகளானவும்; (எ-று.)
(வி-ம்.)வண்டல் - இளஞ்சேறு. பொன்னி-காவிரி. மதுரிக்க-இனிக்க. அட்டு - சமைத்து. நாச்சுருண்டது - கொதிக்கும் கூழை ஆசையால உட்கொண்டமையின். உள்புக்கு-உள்ளே சென்று. (15) செவிட்டுப் பேயைக் கூறியது 149. | ஆனை சாயவ டுபரி ஒன்றுகைத்து | | ஐம்ப டைப்பரு வத்துஅப யன்பொருஞ் சேனை வீரர்நின் றார்த்திடும் ஆர்ப்பினில் திமிரி வெங்களத் திற்செவி டானவும். | (பொ-நி.) அபயன், பரி உகைத்து பொரும் திமிரி வெங்களத்தில ்வீரர் ஆர்த்திடும் ஆர்ப்பினில் செவிடானவும்; (எ-று.)
(வி-ம்.)ஆனை-யானை, அடு-கொல்லுகின்ற, பரி-குதிரை, உகைத்து-செலுத்தி; ஓட்டி. ஐம்படைப்பருவம் - ஐம்படைத்தாலி அணியும் இளமைப்பருவம், ஐம்படை: வில், வாள், தண்டு, வளை, ஆழி என்பன. இவைகளின் உருவைப் பொன்னாற் செய்து இளஞ்சிறார்களுக்குக் கழுத்திலணிவது பண்டையோர் மரபு. அபயன்-குலோத்துங்கன். ஆர்ப்பு- பேரொலி. (16) குறட் பேயைக் கூறியது 150. | பண்டு தென்னவர் சாயஅ தற்குமுன் | | பணிசெய் பூதக ணங்கள னைத்தையுங் கொண்டு வந்தபேய் கூடிய போதில்அக் குமரி மாதர்பெ றக்குற ளானவும். | |