பக்கம் எண் :

பேய்களைப் பாடியது61


     (பொ-நி.)    தென்னவர்    சாய,    அதற்குமுன்,   பூதகணங்கள்
அனைத்தையும் பேய் கூடிய போதில், அம்மாதர் பெறக், குறள் ஆனவும்;
(எ-று.)

    
(வி-ம்.)  தென்னவர்  - பாண்டியர்.  சாய - கெட.  அதற்குமுன் -
சாய்வதற்குமுன்.  பணி   செய்தல்  தென்னவர்க்  கென்க.  பூதகணங்கள்-
பூதக்கூட்டம்.  கூடிய போதில் -அக் குறட்பூதங்களோடு பேய்கள் புணர்ந்த
போதில்.  குமரி  மாதர் - இளையகுறட்  பெண்  பூதங்கள், குறள்-குறுகிய
வடிவம்.                                                   (17)

கூன் பேயைக் கூறியது

151.பரக்கு போதக்க டாரம ழித்தநாள்
     பாய்ந்த செம்புன லாடியும் நீந்தியும்
குரக்கு வாதம்பி டித்தவி தத்தினில்
   குடிய டங்கலுங் கூன்முது கானவும்.

    (பொ-நி.)கடாரம்   அழித்தநாள்,  செம்புனல்  ஆடியும்  நீந்தியும்,
குரங்கு வாதம் பிடித்த விதத்தினில் கூன்முதுகு ஆனவும்; (எ-று.)

  
  (வி-ம்.) ஓதம்- கடற்சார்பு. கடாரம் - பர்மா நாட்டின் கடற்கரையை
அடுத்த  ஓரூர்.   செம்புனல்  - குருதி.  ஆடுதல்  -நீந்தி விளையாடுதல்.
குரங்குவாதம் - குரங்குபோற்  கூனல்  உண்டாக்கும்  ஒரு  வகை நோய்.
விதத்தினில்-விதத்தால். குடி அடங்கலும்-சில பேய்க்கூட்டம் முழுதும். (18)

திறந்த விரற்பேயைக் கூறியது

152. சிங்க ளத்தொடு தென்மது ராபுரி
     செற்ற கொற்றவன் வெற்றிகொள் காலையே
வெங்க ளத்தில் அடுமடைப் பேய்க்குலம்
   வேலை புக்குவி ரல்கள் திறந்தவும்

    (பொ-நி.)வெற்றிகொள் காலை, களத்தில் அடுமடைப பேய்க் குலம்
வேலை புக்கு விரல்கள் திறந்தவும்; (எ-று.)

    
(வி-ம்.)செற்ற - அழித்த.  கொற்றவன் - குலோத்துங்கன்.   களம்-
போர்க்களம்.   அடுதல் - சமைத்தல்.  மடைத்தொழில் - சமையற்றொழில்.
வேலை-கடல்.                                              (18)