(பொ-நி.) தென்னவர் சாய, அதற்குமுன், பூதகணங்கள் அனைத்தையும் பேய் கூடிய போதில், அம்மாதர் பெறக், குறள் ஆனவும்; (எ-று.) (வி-ம்.) தென்னவர் - பாண்டியர். சாய - கெட. அதற்குமுன் - சாய்வதற்குமுன். பணி செய்தல் தென்னவர்க் கென்க. பூதகணங்கள்- பூதக்கூட்டம். கூடிய போதில் -அக் குறட்பூதங்களோடு பேய்கள் புணர்ந்த போதில். குமரி மாதர் - இளையகுறட் பெண் பூதங்கள், குறள்-குறுகிய வடிவம். (17) கூன் பேயைக் கூறியது 151. | பரக்கு போதக்க டாரம ழித்தநாள் | | பாய்ந்த செம்புன லாடியும் நீந்தியும் குரக்கு வாதம்பி டித்தவி தத்தினில் குடிய டங்கலுங் கூன்முது கானவும். | (பொ-நி.)கடாரம் அழித்தநாள், செம்புனல் ஆடியும் நீந்தியும், குரங்கு வாதம் பிடித்த விதத்தினில் கூன்முதுகு ஆனவும்; (எ-று.) (வி-ம்.) ஓதம்- கடற்சார்பு. கடாரம் - பர்மா நாட்டின் கடற்கரையை அடுத்த ஓரூர். செம்புனல் - குருதி. ஆடுதல் -நீந்தி விளையாடுதல். குரங்குவாதம் - குரங்குபோற் கூனல் உண்டாக்கும் ஒரு வகை நோய். விதத்தினில்-விதத்தால். குடி அடங்கலும்-சில பேய்க்கூட்டம் முழுதும். (18)
திறந்த விரற்பேயைக் கூறியது 152. | சிங்க ளத்தொடு தென்மது ராபுரி | | செற்ற கொற்றவன் வெற்றிகொள் காலையே வெங்க ளத்தில் அடுமடைப் பேய்க்குலம் வேலை புக்குவி ரல்கள் திறந்தவும் | (பொ-நி.)வெற்றிகொள் காலை, களத்தில் அடுமடைப பேய்க் குலம் வேலை புக்கு விரல்கள் திறந்தவும்; (எ-று.) (வி-ம்.)செற்ற - அழித்த. கொற்றவன் - குலோத்துங்கன். களம்- போர்க்களம். அடுதல் - சமைத்தல். மடைத்தொழில் - சமையற்றொழில். வேலை-கடல். (18) |