பக்கம் எண் :

இந்திரசாலம்63


     (வி-ம்.)அணை -தலையணை;பேய்முறித்து அணையை இட்டு என்க.
நிணம்-கொழுப்பு.  நிலா-ஒளி.  பஞ்சசயனம்-ஐந்து  மெத்தையை அடுக்கிய
படுக்கை.   ஐந்துவகை   மெத்தையாவது:   இலவம்   பஞ்சு,  செம்பஞ்சு,
வெண்பஞ்சு, மலர்,  அன்னத்தின் இறகுஇவைகளைக்கொண்டு தனித்தனியே
அமைக்கப்படுவது.                                            (2)

காளியின் இருப்பு

155.கெடாதபடி கெடுஞ்செழியர் கெடும்பொழுதின்
     இடும்பிண்டி பாலம் ஏந்தி
இடாகினிகள் இருமருங்கும் ஈச்சோப்பிப்
   பணிமாற இருந்த போழ்தின்.
    
    (பொ-நி.) பிண்டிபாலம் ஏந்தி, இடாகினிகள் ஈச்சோப்பிப்  பணிமாற
இருந்த போழ்தின்; (எ-று.)

    
(வி-ம்.)  கெடும்   செழியர்  - நன்மையற்ற   பாண்டியர்.  கெடும்
பொழுதின்-தோற்று ஓடுங்கால்.  கெடாதபடி-அங்ஙனம் ஓடாதவாறு. இடும்-
குலோத்துங்கன்  எறியும்.  பிண்டி  -  ஒருவகைப்  படை.  பாலம் - மழு;
எறிபடைகள்.   இடாகினிகள் - பிணந்தின்னும்  பெண்பேய்.   ஈச்சோப்பி-
ஈயோட்டும் கருவிப் பொருள். பணிமாற -மாறிமாறி வீச.            (3)

நெடும்பேய் செய்தி கூறியது

156.அடல்நாக வெலும்பெடுத்து நரம்பிற் கட்டி
     அடித்தடியும் பிடித்துஅமரின் மடிந்த வீரர்
குடர்சூடி நிணச்சட்டை யிட்டு நின்ற
   கோயில்நா யகிநெடும்பேய் கும்பிட்டு ஆங்கே.

    (பொ-நி.)  தடிபிடித்துக்,  குடர்சூடி,   நிணச்சட்டை  இட்டு  நின்ற
நெடும்பேய் கும்பிட்டு; (எ-று.)

    
(வி-ம்.) நாகம் - யானை.  நரம்பு - யானையின்  நரம்பு. அடித்தடி-தலையடிமைத்   தொழிலுக்கடையாளமான   தடி.  அமர்  - போர்,  சூடி-
மாலையாகச் சூடி, நிணம்-கொழுப்பு. நாயகி-காளி. நெடும்பேய் -தலைமைப் பேய்.                                                     (4)