நெடும்பேய் காளிக்குக் கூறல் 157. | சுரகுருவின் தூதாகி யமன்பாற் செல்வோன் | | துணித்துவைத்த சிரம்அன்று தின்றபேயைச் சிரம்அரிய வதற்குறவாய் ஒளித்துப் போந்த் சிலபேயைத் திருவுள்ளத் தறிதி யன்றே. | (பொ-நி.) சிரம் தின்ற பேயை, சிரம்அரிய, அதற்கு உறவாய் ஒளித்துப் போந்த பேயை அறிதி அன்றே; (எ-று.)
(வி-ம்.) சுரகுரு -சோழன் ஒருவன். செல்வோன்-சென்ற பேய்மகன். துணித்தல் - வெட்டுதல் (உண்ணுதற்குத் துணித்த தென்க.) சிரம் - தலை. அன்று-அந்தநாள். தின்ற-களவாடித்தின்ற. அரிய-நீ அரிந்துவிட. உறவாய்- தொடர்புற்று நண்புரிமை பூண்ட. (5) ஒரு முதுபேயின் வருகை கூறியது 158. | அப்பேயி னொருமுதுபேய் வந்து நின்றிங்கு | | அடியேனை விண்ணப்பஞ் செய்க என்றது இப்பேய்இங் கொருதீங்குஞ் செய்த தில்லை என்கொலோ திருவுள்ளம் என்னக் கேட்டே. | (பொ-நி.) முதுபேய் வந்துநின்று, "விண்ணப்பம் செய்க" என்றது. "இப் பேய் தீங்கு செய்ததில்லை திருவுள்ளம் என்?" என்னக் கேட்டு; (எ-று.)
(வி-ம்.)முதுபேய் - கிழப்பேய். விண்ணப்பம் செய்தல்-தெரிவித்தல். தன் வருகையைத் தெரிவித்துத் தன்பாற் பிழை இன்மையைத் தெரிவிக்குமாறு முதுபேய் கூறிய தென்க. திருஉள்ளம்-சிறந்த கருத்து. (6) முதுபேய் காளி திருமுன் அணுகியது கூறியது 159. | அழைக்க வென்றலும் அழைக்க வந்தணுகி | | அஞ்சி யஞ்சிஉன தாணையின் பிழைக்க வந்தனம்பொ றுத்தெ மக்கருள்செய் பெண்ண ணங்கெனவ ணங்கவே. | |