பக்கம் எண் :

இந்திரசாலம்65


     (பொ-நி)  "அழைக்க" என்றலும், அழைக்க (முதுபேய்)வந்து அணுகி
அஞ்சி "பிழைக்க வந்தனம்; அருள்செய்" என வணங்க; (எ-று.)

     (வி-ம்.)என்றலும்-காளி என்றலும் அழைக்க -நெடும்பேய் அழைக்க.
ஆணையில் அடங்கிப் பிழைக்க வந்தனம் என்க. அணங்கு-தெய்வம்.   (7)

முதுபேய்க்குக் காளி மொழிந்தது கூறியது

160. அருத்தி யிற்பிழைநி னைத்த கூளியை
     அறுத்த வன்தலைய வன்பெறப் 
பொருத்தி அப்பிழைபொ றுத்த னம்பிழை
   பொறாத தில்லையினி யென்னவே.

     (பொ-நி.) "கூளியை அறுத்த தலையை அவன் பெறப்பொருத்தி, அப்
பிழை பொறுத்தனம். இனிப் பொறாத பிழை இல்லை" என்ன; (எ-று.)

     (வி-ம்.)அருத்தி -(தலையின் மேல் வைத்து) ஆசை, பிழை- குற்றம்,
களவாடல். கூளி - பேய். வன் - வலிய. தலை - போயினதுதலை. அவன்-
தூதுசென்றவன். பொருத்தி-அமைத்து.                          (8)

முதுபேய் மொழிந்தது கூறியது

161.உய்ந்து போயினம்உ வந்தெ மக்கருள
     ஒன்றோ டொப்பனவொ ராயிரம் 
இந்திர சாலமுள கற்று வந்தனென்
   இருந்து காணெனஇ றைஞ்சியே.

     (பொ-நி.)  "நீ   அருள,  உய்ந்து  போயினம்;   ஆயிரம்  இந்திர
சாலம்உள; கற்றுவந்தனன் காண்" என இறைஞ்சி; (எ-று.)

     (வி-ம்.)உய்தல் -பிழைத்தல்.  உவந்து-மகிழ்ந்து. ஒன்றோடொப்பன-
ஒன்றேபோல.  இந்திரசாலம்-மாயவித்தை.  இதனை உலக வழக்கில்  'கண்
கட்டி வித்தை' என வழங்குவர். இறைஞ்சி-வணங்கி.                (9)