துதிக்கை, யானைத் தலைகளான இந்திரசாலம் கூறியது 162. | ஏற நின்னிருதி ருக்கண் வைத்தருள்செய் | | இக்கை யிற்சிலது திக்கைபார் மாறி யிக்கையில்அ மைக்க மற்றவை மதக்க ரித்தலைகள் ஆனபார். | (பொ-நி.) "திருக்கண்வைத்து அருள்செய்; இக்கையில் துதிக்கை அழைக்க, இக்கையில் மதக்கரித் தலைகள் ஆன" பார்; (எ-று.)
(வி-ம்.)ஏற - நேரே, திரு இருகண் - அழகிய இரண்டு கண்கள். துதிக்கை-தும்பிக்கை. அழைக்க-கூப்பிட்டவுடன். மதக்கரி-மதயானை. (10) யானைத் தலையுடன் குறையுடலும் காட்டிய இந்திரசாலம் கூறியது 163. | இக்க ரித்தலையிடன் வாயி னின்று உதிர | | நீர்குடித்து உருமி டித்தெனக் கொக்க ரித்து அலகை சுற்ற மற்றிவை குறைத்த லைப்பிணம்மி தப்பபார். | (பொ-நி.) "அலகை, கரித்தலையின் வாயினின்று, உதிரநீர் குடித்து, கொக்கரித்துச் சுற்ற, குறைத்தலைப் பிணம் மிதப்ப" பார், (எ-று.)
(வி-ம்.)கரி - யானை, உதிரநீர் -குருதி. உரும்-இடி. கொக்கரித்தல்- இரைச்சல்இடல். அலகை-பேய். குறைத்தலைப்பிணம் - யானையின் தலை குறைந்த உடல். (11)முதுபேய் பரணிகாட்டத் தொடங்கியது கூறியது 164. | அடக்கம் அன்றிதுகி டக்க எம்முடைய | | அம்மை வாழ்கஎன வெம்மைபார!் கடக்கம் அன்றபயன் வென்று வென்றிகொள் களப்பெ ரும்பரணி இன்றுபார். | (பொ-நி.) "இது கிடக்க, அபயன் வென்றிகொள்களப் பெரும் பரணி இன்று பார் "; (எ-று.) |