பக்கம் எண் :

68கலிங்கத்துப்பரணி

     (பொ-நி.) நிணங்கள் பார்; நிலங்கள் பார்; பிணங்கள் பார்; பேய்கள்
பார்;(எ-று.)

     (வி-ம்.)நிணம்  - கொழுப்பு,  மணம் - நாற்றம், கனிந்த -முதிர்ந்த
அடங்கலும்-முழுதும். கிடக்க-இருக்க.                           (15)

இந்திரசாலம் கண்ட பேய்நிலை கூறியது

168.என்ற போதில் இவை மெய்யெ னாஉட
     னிருந்த பேய்பதறி ஒன்றன் மேல்
ஒன்று கான்முறிய மேல்வி ழுந்தடிசில்்
   உண்ண எண்ணிவெறு மண்ணின்மேல்

     (பொ-நி.)   என்ற  போதில்,  மெய்  எனா,  பேய்,  பதறி, விழுந்து,
உண்ண எண்ணி; (எ-று.)

     (வி-ம்.)எனா-என்று. வெறுமண்ணின்மேல்-வெறுந்தரையில். அடிசில்-உணவு.                                                   (16)

இதுவும் அது

169.விழுந்துகொ ழுங்குரு தீப்புனல் என்று
     வெறுங்கைமு கந்துமுகந்து
எழுந்துவி ழுந்தசை யென்றுநி லத்தை
   இருந்துது ழாவிடுமே.

     (பொ-நி.)  விழுந்து,  வெறுங்கை  முகந்து,  நிலத்தைத் துழாவிடும்;
(எ-று.)

     (வி-ம்.)கொழும் -செழுமையாகிய, குருதி-செந்நீர். முகந்து-மொண்டு.
தசை-சதை. இருந்து-விட்டகலாமல் இருந்து. துழாவுதல்-கிண்டுதல்.     (17)

இதுவும் அது

170. சுற்றநி ணத்துகில் பெற்றனம் என்று
     சுலாவுவெ றுங்கையவே
அற்றகு றை த்தலை யென்றுவி சும்பை
   அதுக்குமெ யிற்றினவே.