(பொ-நி.) நிணங்கள் பார்; நிலங்கள் பார்; பிணங்கள் பார்; பேய்கள் பார்;(எ-று.)
(வி-ம்.)நிணம் - கொழுப்பு, மணம் - நாற்றம், கனிந்த -முதிர்ந்த அடங்கலும்-முழுதும். கிடக்க-இருக்க. (15) இந்திரசாலம் கண்ட பேய்நிலை கூறியது 168. | என்ற போதில் இவை மெய்யெ னாஉட | | னிருந்த பேய்பதறி ஒன்றன் மேல் ஒன்று கான்முறிய மேல்வி ழுந்தடிசில்் உண்ண எண்ணிவெறு மண்ணின்மேல் | (பொ-நி.) என்ற போதில், மெய் எனா, பேய், பதறி, விழுந்து, உண்ண எண்ணி; (எ-று.) (வி-ம்.)எனா-என்று. வெறுமண்ணின்மேல்-வெறுந்தரையில். அடிசில்-உணவு. (16) இதுவும் அது 169. | விழுந்துகொ ழுங்குரு தீப்புனல் என்று | | வெறுங்கைமு கந்துமுகந்து எழுந்துவி ழுந்தசை யென்றுநி லத்தை இருந்துது ழாவிடுமே. |
(பொ-நி.) விழுந்து, வெறுங்கை முகந்து, நிலத்தைத் துழாவிடும்; (எ-று.)
(வி-ம்.)கொழும் -செழுமையாகிய, குருதி-செந்நீர். முகந்து-மொண்டு. தசை-சதை. இருந்து-விட்டகலாமல் இருந்து. துழாவுதல்-கிண்டுதல். (17) இதுவும் அது 170. | சுற்றநி ணத்துகில் பெற்றனம் என்று | | சுலாவுவெ றுங்கையவே அற்றகு றை த்தலை யென்றுவி சும்பை அதுக்குமெ யிற்றினவே. | |